Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கல்யாணப் பத்திரிக்கையை வைத்து திருப்பதி கோவிலில் வழிபட்டார் மீனா
நடிகை மீனாவுக்கு ஜூலை 12ம் தேதி திருப்பதியில் திருமணமாகவுள்ளது. மாப்பிள்ளை வித்யாசாகர் பெங்களூர்க்காரர்.
திருமணத்தையடுத்து சென்னையில் ஜூலை 14ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்யாணம் நிச்சயமானதும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்தே வந்து தரிசனம் செய்வதாக வேண்டியிருந்தாராம் மீனா. அதன்படி தனது கல்யாணப் பத்திரிக்கையுடன் அவர் திருப்பதி சென்றார்.
தந்தை துரைராஜ், தாயார் மல்லிகாவுடன் திருப்பதி சென்ற அவர் கீழ் திருப்பதியிலிருந்து படிகள் வழியாக சுமார் 3 மணி நேரம் நடந்து திருமலையை அடைந்தார்.
அங்கு ஏழுமலையான் பாதத்தி்ல கல்யாணப் பத்திரி்க்கையை வைத்து பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் பிரசாதத்தை பெற்றுக் கொண்டார்.
பின்னர் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் சிக்கிக் கொண்டார் மீனா. அவர்களிடம் அவர் பேசுகையில், திருமணமானாலும் தொடர்ந்து நடிப்பேன். டிவி தொடர்களிலும், நல்ல கேரக்டர்கள் கொண்ட படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்றார் மீனா.