Don't Miss!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சதா விடும் ரீல்!
என்ன வாய்ப்பு அது...?
சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நாயகியாக நடிப்பதுதான். சிவாஜி படத்தில் ஸ்ரேயா வேடத்தில் நடிக்க முதலில் ஷங்கர் அழைத்தது சதாவைத்தானாம். அந்நியனில் நடித்ததன் மூலம் இருவருக்குமிடையே நல்ல அன்டர்ஸ்டாண்டிங் இருந்த்தால் சதாவையே சூப்பர்ஸ்டாரின் ஜோடியாக்கி விடும் திட்டத்தில் இருந்தாராம் ஷங்கர்.
படம் தொடங்குவதற்கு முன் இந்த விஷயத்தை சதாவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரோ இந்த விஷயத்தை ரொம்ப சாதாவாக எடுத்துக்கொண்டதோடு, அடுத்த நாளே தனக்கு இதில் ஆர்வமில்லை என்றும் கூறிவிட்டாராம். காரணம் அப்போது அவருக்கு இந்திப் படங்களில் நடிக்க அழைப்பு வந்திருந்ததாம்.
இந்தியில் நடித்தால் கோடி கோடியாகக் கொட்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. ஆனால் தமிழில் சுத்தமாக காணாமலே போய்விட்டார் சதா.
அவருக்கு பதில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவோ ஹாலிவுட் ரேஞ்சுக்குப் போய் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கிறார்.
அடடா... ரஜினியுடன் நடிப்பதில் இத்தனை லாபமிருக்கிறதா என லேட்டாகப் புரிந்துகொண்ட சதா, தனது ஏமாற்றத்தை மறைக்க, 'இந்திப்படத்துக்காக ரஜினி பட வாய்ப்பையே உதறியவளாக்கும் நான்' என்ற ரேஞ்சுக்கு பீலா விட்டுக் கொண்டிருக்கிறாராம்.
இப்போது ராஜா பண்டேலா இயக்கத்தில் தில் தோ தீவானா ஹய் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக சதா நடித்து வருகிறார். வரும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வருகிறதாம். படம் வெளிவந்தால், பாலிவுட்டில் நிரந்தரமாக தங்கிவிட திட்டமிட்டுள்ளார் சதா.
ஆனாலும் அவரை ஹிந்தி பத்திரிகைகள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. படத்தில் இன்னொரு இணையான ஜீனத் அமன்-ராஜ் பப்பர் குறித்தே மும்பை பத்திரிகைகள் அதிகம் எழுதுகின்றனவாம்.
தமிழில் மாதவனோடு அவர் நடித்துள்ள ஒரு படமும் வருமா வராதா என்றே தெரியவில்லை. புதுப்பட வாய்ப்புக் கேட்டாலும் யாரும் தரத் தயாராக இல்லை. விட்டால் அக்கா வேடத்துக்கு கூப்பிடுவார்கள் எனும் நிலை.
என்னதான் செய்வார் சதா... அதான் புண்பட்ட உள்ளத்தை புருடா விட்டு ஆற்றிக் கொண்டிருக்கிறார்!