Don't Miss!
- Sports 89 ரன்களில் குஜராத் ஆல் அவுட்.. 8.5வது ஓவரில் எல்லாம் போட்டியை முடித்த டெல்லி.. எகிறிய ரன் ரேட்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Automobiles ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பேசாமல் பேசும் அபிநயா!
நல்ல உயரம், எப்போதும் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும் குறும்புத்தனமான சிரிப்பு, யார் என்ன பேசினாலும் உடனே கிரகித்துக் கொண்டு இமிட்டேட் செய்யும் திறமை. இதுதான் அபிநயா.
நாடோடிகள் படத்தின் மூலம் மின்னல் வேகத்தில் லைம் லைட்டுக்கு வந்தவர் அபிநயா. பேச முடியாது, கேட்க முடியாது என்ற குறைகள் இருந்தாலும், அதை அப்படியே தூரப் போட்டு விட்டு தனது திறமையாலும், அபாரமான புத்திசாலித்தனத்தாலும் அத்தனை திரை ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறார் அபிநயா.
இயக்குநர்கள் சசிக்குமார், சமுத்திரக்கனியால் அடையாளம் காணப்பட்டு நாடோடிகள் படத்தில் நடிக்க வந்தவர் இன்று தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரபலமாகி விட்டார்.
சிறு வயதிலிருந்தே தனக்குள் இருந்த திறமைகளை அழகுற வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார் அபிநயா. இதுகுறித்து அவரது தாயார் ஹேமலதா கூறுகையில், விளம்பரப் பட இயக்குநர் ஸ்லீபாதான் அபிநயாவின் திறமையை கண்டறிந்தவர். அவர் மூலம்தான் மாடலிங்கில் அபிநயாவை ஈடுபடுத்தினோம்.
19 வயதாகும் அபிநயாவின் திறமையை வெளிக் கொண்டு வந்த பெருமைக்குரியவர்கள் சசிக்குமாரும், சமுத்திரக்கனியும்தான். நாடோடிகள் வந்து வெற்றி பெற்ற பின்னர் பிரபல நடிகையாகி விட்டார் அபிநயா. இதனால் அவரால் கல்லூரியில் கூட சேர முடியாமல் போய் விட்டது என்கிறார்.
அபிநயாவின் தந்தை ஆனந்த் தெலுங்கில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர். அவர் கூறுகையில், டாக்டர் மோகன் காமேஸ்வரன் செய்த ஒரு அருமையான அறுவைச் சிகிச்சையால் இப்போது அபிநயாவால் லேசாக கேட்க முடிகிறது என்கிறார்.
ஹேமலதா தொடருகையில், நாடோடிகள் படத்திற்குப் புதுமுகம் தேவை என்று தேடியபோதுதான் சமுத்திரக்கனி எனது மகளின் படத்தைப் பார்த்து உடனே செலக்ட் செய்தார்.
தமிழில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடத்திலும் அபிநயா அதே கேரக்டரில் நடித்தார். நான் வசனங்களைப் பெற்று அதை ஆங்கிலத்தில் எழுதி அபிநயாவிடம் கொடுப்பேன். அதைப் பார்த்து அதற்கேற்ப வாயசைப்பார் அபிநயா.
இப்போது ஈசன் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறோம். அப்படத்தில் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் பெண்ணாக நடித்திருக்கிறார் அபிநயா என்றார்.
தமிழைப் பேசக் கூடத் தெரியாமல், குத்திக் குதறி துப்பித் தள்ளும் நடிகைகளுக்கு மத்தியில் தமிழ் உணர்வுகளை அழகாக எடுத்து வைக்கும் இந்த பேசாத அழகுப் பெண் நிச்சயம் மகத்தானவர்தான்.