Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகை சரண்யா மோகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது
திருவனந்தபுரம்: நடிகை சரண்யா மோகனுக்கு கேரளாவில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்த கேரளாவை சேர்ந்த நடிகை சரண்யா மோகன். இவர் நடிப்பு, நடனம், பாடகி என பன்முகத் தன்மை கொண்டவர்.
இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக காதலுக்கு மரியாதை படத்தில் அறிமுகமானார். பிறகு இவர் நடித்து வெளிவந்த யாரடி நீ மோகினி, அழகர்சாமி, வேலாயுதம், வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்கள் நடித்து புகழ் பெற்றார்.
இவருக்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சரண்யா மோகன்அரவிந்த் கிருஷ்ணன் திருமணம் ஆலப்புழாவில் நடந்தது. இனிமேல் நான் நடிக்கமாட்டேன். நடனப்பள்ளி தொடங்கி நடத்துவேன் என்று அவர் கூறினார். அதன்படி நடிக்கவில்லை. இந்நிலையில் கேரளாவில் இவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.