போதைப் பொருள் வழக்கில் தள்ளாடும் ரகுல் ப்ரீத் சிங்... பதற்றத்தில் டோலிவுட் பிரபலங்கள்!

ஐதராபாத்: நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழில் தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் ஆகிய படங்களில் பிஸியாக் இருக்கிறார்.

இந்நிலையில், கடந்தாண்டு போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தற்போது மீண்டும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

 பரபரப்பில் ரகுல் ப்ரீத் சிங்

பரபரப்பில் ரகுல் ப்ரீத் சிங்

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி ரகுல் ப்ரீத் சிங்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பூரி ஜெகன்நாத், சார்மி ஆகியோரும் இந்த விசாரணையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போதைப் பொருள், பண மோசடி வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாகத்துறை தற்போது மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன் விசாரணை செய்த அதே அதிகாரிகள் தான் தற்போதும் ரகுல் ப்ரீத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளார்களாம். மீண்டும் இந்த வ்ழக்கு சூடுபிடித்துள்ளதால், இதில் தொடர்புடைய மற்ற பிரப்லங்களும் பதற்றத்தில் உள்ளார்களாம்.

 போதைப் பொருள் வழக்கில் ரகுல் ப்ரீத்

போதைப் பொருள் வழக்கில் ரகுல் ப்ரீத்

இந்நிலையில், கடந்தாண்டு சிக்கிய போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ரகுல் பிரீத் சிங்குக்கு, தற்போது மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தெலுங்குத் திரையுலகில் போதைப் பொருள் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக இயக்குநர் பூரி ஜெகநாதன், சார்மி கவுர், ராணா, நவ்தீப் ரவிதேஜா ஆகியோருடன் ரகுல் ப்ரீத் சிங் உட்பட 12 பிரபலங்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த விவகாரத்தில், ஹவாலா பணம் கைமாறியிருப்பதும் உறுதியானது.

 மீண்டும் நெருக்கடி

மீண்டும் நெருக்கடி

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி ரகுல் ப்ரீத் சிங்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பூரி ஜெகன்நாத், சார்மி ஆகியோரும் இந்த விசாரணையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போதைப் பொருள், பண மோசடி வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாகத்துறை தற்போது மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன் விசாரணை செய்த அதே அதிகாரிகள் தான் தற்போதும் ரகுல் ப்ரீத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளார்களாம். மீண்டும் இந்த வ்ழக்கு சூடுபிடித்துள்ளதால், இதில் தொடர்புடைய மற்ற பிரப்லங்களும் பதற்றத்தில் உள்ளார்களாம்.

 யார் அந்த கெல்வின்?

யார் அந்த கெல்வின்?

முன்னதாக போதை மருந்து விற்பனை செய்ததாக கெல்வின் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது தான், அவரது செல்போனில் இருந்து தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகளின் நம்பர்களை கைப்பற்றியிருந்தனர். இதனால், கெல்வினுக்கும் டோலிவுட் பிரபலங்களுக்கும் இடையேயான தொடர்பு என்ன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியன் 2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் மீண்டும் போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X