அய்யோ பாவம், இந்த நடிகை சிறுவயதில் இருந்து இவ்வளவு கஷ்டப்பட்டாரா!
திருவனந்தபுரம்: தான் குழந்தையாக இருந்தபோது ஆண்களால் தொல்லைகளுக்கு ஆளானதாக நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருபவர் பார்வதி நாயர். அவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புனித தெரஸா கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
நான் குழந்தையாக இருந்தபோது ஆண்களால் தொல்லைகளுக்கு ஆளானேன். ஈவ் டீஸிங் பிரச்சனையும் இருந்தது. ஆன்லைன் மற்றும் நேரில் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தவர்களும் உண்டு.
இது போன்ற சூழல் எதிர்காலத்திலும் ஏற்படக்கூடும். பெரியவர்கள் எது சொன்னாலும் நம் நன்மைக்கு தான் என்பதை இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும். பெரியவர்கள் சொல்வதை இளைஞர்கள் பொறுமையாக கேட்க வேண்டும் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications