Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிப்பதை நான் ஏன் நிறுத்த வேண்டும்... இரு புது படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்! - த்ரிஷா
திருமணமானாலும் நான் நடிப்பதை நிறுத்தப் போவதில்லை. புதிய படங்களில் ஒப்பந்தமாகப் போகிறேன் என்று நடிகை த்ரிஷா அறிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜனவரி 23-ம் தேதி நடக்கிறது. இதனை இன்று அறிவித்துள்ள த்ரிஷா, தான் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று வந்த செய்திகளை மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், "நடிப்பதை நிறுத்தும் எண்ணமே எனக்கு இல்லை. நான் ஏன் நிறுத்த வேண்டும்..? சொல்லப் போனால் இனிமேல் புதுப்படங்களை ஒப்புக் கொள்ளப் போகிறேன். இந்த 2015-ல் மட்டும் எனது நான்கு படங்கள் வெளிவரவிருக்கின்றன," என்று கூறியுள்ளார்.
வருண் மணியன் தொழிலதிபர் மட்டுமல்ல.. தயாரிப்பாளரும் கூட. வாயை மூடிப் பேசவும், காவியத் தலைவன் போன்ற படங்களைத் தயாரித்துள்ள அவர், மேலும் இரு புதிய படங்களைத் தயாரித்து வருகிறார். கணவருடன் இணைந்து இந்த தயாரிப்புப் பணிகளிலும் ஈடுபடப் போகிறாராம் த்ரிஷா.