Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமாவில் பணத்தை விட நடிப்பே முக்கியம்- இனியா
சென்னை: பணத்தை விட திறமையான நடிகை என்ற பெயரை வாங்கவே நான் விரும்புகிறேன் என்று நடிகை இனியா தெரிவித்து இருக்கிறார்.
யுத்தம் செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இனியா தொடர்ந்து மவுனகுரு, வாகை சூடவா, அம்மாவின் கைபேசி போன்ற படங்களில் நடித்து நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரைப் பெற்றார்.
கதாநாயகி மட்டுமின்றி ஒரு பாடல் மற்றும் வில்லி வேடங்களிலும் நடித்து நான் எந்த வேடத்தையும் ஏற்பேன் என்று இயக்குநர்களுக்கு சொல்லாமல் சொல்லிய இனியா தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்பதைவிட நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரை வாங்கவே தான் விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் மலையாள உலகில் பிரபலமாக இருக்கும் இனியா தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார்.
வைகை எக்ஸ்பிரஸ், கரையோரம் மற்றும் காதல் சொல்ல நேரமில்லை போன்ற படங்களில் நடித்திருக்கும் இனியாவிற்கு தமிழில் ரஜினி, விஜய் மற்றும் அஜீத்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது கனவாம்.