சரித்திரம் படைக்க ஆசைப்படும் திரிஷா!
சென்னை: பாகுபலி படம் மற்றும் அதன் வெற்றி உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சத்தமில்லாமல் ஒரு மாற்றம் இந்தியத் திரையுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
ஆமாம் சரித்திரப் படங்களின் மீது நடிக, நடிகையர் மற்றும் இயக்குனர்களின் கவனம் திரும்பி இருக்கின்றது. தமிழின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான எஸ்.பி.ஜனநாதன் தஞ்சை பெரிய கோயிலை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

இதுநாள்வரை கமர்சியல் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை த்ரிஷா தற்போது சரித்திரப் படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். த்ரிஷாவின் இந்தத் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவென்று விசாரித்தால் எல்லாம் பாகுபலியின் தாக்கம் தான் என்கிறார்கள்.
சரித்திரப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை, பாகுபலி பார்ப்பதற்கு முன்பிருந்தே எனக்கு இந்த ஆசை உள்ளது. சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு சரித்திரப் படத்தில் நடிக்க வேண்டும்" என்று த்ரிஷா தனது நீண்டநாள் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ராஜமௌலி காரு பாகுபலி 2 படத்துல த்ரிஷாவுக்கும் ஒரு ரோல் கொடுங்க...


Click it and Unblock the Notifications











