Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தெலுங்கில் ஒளிரும் ஜோதிர்
திருமணமானதையே வெகு காலமாக மறைத்து நடித்துக் கலக்கியவர் ஜோதிர்மயி. தலைநகரம் இவருக்கு பிரேக் கொடுத்தது. முதல் படமே ஹிட் ஆனதால், தலைநகரம் படத்திற்குப் பிறகு ஜோதிரைத் தேடி சில பட வாய்ப்புகள் வந்தன.
ஆனால் கல்யாணமான பெண் என்ற தகவல் லேசு பாசாக கோலிவுட்டில் தலை காட்டத் தொடங்கியதால் பலரும் இவருடன் ஜோடி போட தயங்கினர். இதை அறிந்த ஜோதிர், தான் எப்படிப்பட்ட கேர்கடரிலும் நடிக்கத் தயார், கிளாமராகவும் நடிக்கத் தயார் என்று போஸ்டர் ஒட்டாத குறையாக அறிவித்தார்.
இதன் விளைவாக ஓரிரு படங்கள் வந்தன. அதில் நான் அவனில்லை படத்தில் முண்டு கட்டிய கேரளத்துப் பெண்ணாக கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட நடித்தார்.
பெரியார் படத்தில் நாகம்மை கேரக்டரில் நடித்து அசத்தினார். அதைத் தொடர்ந்து வந்த நான் அவனில்லை பெரிதாக போனாலும் கூட ஜோதிரைத் தேடி சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் வரவில்லை. இதனால் வேறு பக்கம் பார்வையைத் திருப்பினார். அவருக்கு தெலுங்கு அடைக்கலம் கொடுத்தது.
தெலுங்கில் தற்போது இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் ஜோதிர். இரண்டிலுமே கவர்ச்சிக்கு நிறைய வேலைகள் இருக்கிறதாம். வருத்தப்படாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜோதிர்.
மலையாளத்திலும் ஒரு படம் வந்திருக்கிறதாம். அதேபோல தமிழில் அறை எண் 305ல் கடவுள் படத்தில் ஜோதிர் நடிக்கிறார். இதில் அவருக்கு அம்மாவாக முன்னாள் கவர்ச்சி நாயகி குயிலி நடிக்கிறார். இந்த வேடம் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் ஜோதிர்மயி.
என்னைப் போல தமிழை நம்பி வந்த பல மலையாள நடிகைகளுக்கு தமிழ் நல்ல வரவேற்பு கொடுத்து தூக்கி விட்டது. ஆனால் என்னைத்தான் ஏனோ கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது என்ற வருத்தம் ஜோதிருக்கு உள்ளதாம்.