Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'அந்த' இயக்குனர் படத்தில் நடிப்பதை நினைத்தாலே படபடப்பாக இருக்கிறது: காஜல்
ஹைதராபாத்: இயக்குனர் தேஜாவுடன் சேர்ந்து மீண்டும் பணியாற்றுவதை நினைத்தால் படபடப்பாக இருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
2007ம் ஆண்டு வெளியான லக்ஷ்மி கல்யாணம் படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அவரை அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் தேஜா.
டோலிவுட்டில் மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ளார் காஜல் அகர்வால்.
தேஜா
10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேஜாவின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் காஜல் அகர்வால். நேனே ராஜு நேனே மந்திரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் ஹீரோ ராணா. படத்தில் கேத்ரீன் தெரஸாவும் உள்ளார்.
படபடப்பு
தன்னை டோலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்த தேஜாவின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாகவும், படபடப்பாகவும் இருப்பதாக காஜல் தெரிவித்துள்ளார்.
அஜீத், விஜய்
காஜல் அகர்வால் தமிழில் அஜீத்துடன் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்திலும் நடிக்கிறார்.
ஹிட்
சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க நடிகைகள் தயங்கியபோது கைதி எண் 150 படத்தில் துணிச்சலாக நடித்தார் காஜல். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.