Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்ன அவரா அப்படி? ... அலறடிக்கும் "ஆட்டோகிராப்" மல்லிகா!
சென்னை: இயக்குனராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ள நடிகை மல்லிகா அவரது படத்தில் நடிகைகள் நடிக்கத் தயங்கும் துணை நடிகை கேரக்டரில் துணிச்சலாக நடித்து வருகின்றார்.
ஆட்டோகிராப் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை மல்லிகா, அதன்பின்னர் பல படங்களில் தங்கை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் இயக்குனராக மாறியுள்ளார்.
"பழனியிலே கனகம்" என்ற மலையாளப் படத்தில் இயக்குனர் பொறுப்பை ஏற்றிருக்கும் மல்லிகா, இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார். நடிகை பாவனா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் மல்லிகா துணை நடிகையாக நடித்துள்ளார்.
சினிமா உலகில் நடிகைகளும், துணை நடிகைகளும் படக்குழுவினர்களால் என்னென்ன தொந்தரவுகள் அனுபவிக்கின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக படமாக்கியிருப்பதாக கூறியுள்ளார் மல்லிகா.
மேலும், இந்த படத்தின் துணை நடிகை வேடத்தில் நடிக்க பிரபல நடிகைகள் யாரும் சம்மதிக்காததால், துணிச்சலாக நானே இந்த கேரக்டரில் நடிக்க முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த படம் நடிகைகளின் மறுபக்கத்தை அப்பட்டமாக வெளிக்கொண்டு வரவிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.