கேரள மாப்பிள்ளையைக் கைப்பிடிக்கிறார் மீரா ஜாஸ்மின்.. மாண்டலின் ராஜேஷ்?
திருவனந்தபுரம்: மாண்டலின் ராஜேஷுடன் காதல், இணைந்து வாழ்வதாக வந்த தகவல் ஆகியவற்றுக்கு மத்தியில் தற்போது கேரளாவைச் சேர்ந்த மலையாள மாப்பிள்ளை ஒருவருடன் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.
இவர்களது திருமணம் பிப்ரவரி 12ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள சர்ச்சில் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் மாண்டலின் ராஜேஷுடனான மீராவின் காதல் முறிந்து போய் விட்டது உறுதியாகியுள்ளது.

கேரளத்து மீரா
கேரளாவைச் சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின். பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ரன் மூலம்
தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமானார் மீரா. பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

இங்க என்ன சொல்லுது
தற்போது இங்க என்ன சொல்லுது என்ற தமிழ்ப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மாண்டலின் ராஜேஷுடன் காதல்
இவருக்கும், இசைக் கலைஞரான மாண்டலின் ராஜேஷுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கூட தகவல்கள் கூறின. இருவரும் இணைந்து பல இடங்களுக்கும் போய் வந்தனர்.

கேரளத்து அனில்
ஆனால் தற்போது கேரளத்து அனில் ஜான் டைட்டஸ் என்பவருடன் மீராவுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அனில் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்.

பிப்ரவரி 12ல் திருமணம்
அனில் மீரா திருமணம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சர்ச்சில் பிப்ரவரி 12ம் தேதி நடைபெறவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











