Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹீரோயின்
சிவாஜியின் பேரன் துஷ்யந்துடன் நடித்த நேரமோ என்னவோ தமிழில் சுத்தமாக வாய்ப்புக்களே இல்லாமல்போய்விட்டது நந்தனாவுக்கு.
இதனால் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு சொந்த ஊரான திருவனந்தபுரத்துக்கே போய்விட்டார். அங்குபோய் மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
துஷ்யந்துக்கு ஜோடியாக சக்ஸஸ் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வரப்பட்டார் நந்தனா. ஆனால், படம்படு பிளாப். இதற்கு முக்கிய காரணமாக துஷ்யந்தைத் தான் சொன்னார்கள். நடிக்கவும் தெரியாமல் ஆடவும்தெரியாமல் கேமரா முன் சோதாவாக வந்து நின்று படம் பார்த்தவர்களை எரிச்சலூட்டினார்.
இந்தப் படம் தோற்றாலும் நந்தானாவுக்கு வாய்ப்புக்கள் வந்தன. ஆனால், அப்படி நடிக்க மாட்டேன், இப்படிநடிக்க மாட்டேன் என இவர் போட்ட கண்டிஷன்களால் வந்த வாய்ப்புகள் எல்லாம் அதே வேகத்தில்திரும்பியோடி விட்டன.
இருந்தாலும் தான் நினைத்தபடி ரோல் கிடைக்கும் என்று நம்பி உயர்ந்த ரக ஹோட்டல் ஒன்றில் சொந்தக் காசில்ரூம் போட்டு காத்துக் கிடந்தார் நந்தானா. ஆனால், இவரை புக் செய்தவர்கள் கூட சூட்டிங்குக்கு அழைக்கவில்லை.
இதையடுத்து விட்டுக் கொடுத்து நடிக்கத் தயார் என்று தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் போன் மேல்போன் போட்டு கெஞ்சிப் பார்த்தார். ஒருவரும் சீண்டவில்லைஇதனால் நொந்து போன நந்தனா மெட்ராசுக்கு கும்பிடு போட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டார்.
தமிழில் இந்த ரோல் செய்ய மாட்டேன், அந்த ரோல் செய்ய மாட்டேன் என வசனம் பேசிய நந்தனா கேரளாவில்மட்டும் போய் என்ன ரோல் கொடுத்தாலும் செய்ய ஆரம்பித்துள்ளார். இப்போது இளம் விதவை ரோலில் ஒருபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க