Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பேசிய சம்பளத்தைத் தராததால், சிம்பு படத்துக்கு 'டிமிக்கி' கொடுத்த நயன்தாரா!
சென்னை: பேசியபடி கூடுதல் சம்பளம் தராததால் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் மேற்கொண்டு நடிக்காமல் தாமதம் செய்கிறாராம் நயன்தாரா.
ஒரு காலத்தில் ஹாட் லவ்வர்ஸாகத் திகழ்ந்தவர்கள் சிம்புவும் நயன்தாராவும்.
பின்னர் டாமரென்று உடைந்தது இவர்கள் காதல். அதன் பிறகு சிம்பு வேறொரு காதலில் விழுந்து, அதுவும் டமாராகிவிட்டது.
இப்போது நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்தப் படம்தான் இது நம்ம ஆளு.
இந்தப் படத்தில் நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன், வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட 30 சதவீதம் கூடுதல் சம்பளம் வேண்டும் என்பதுதான்.
இதற்கு ஒப்புக் கொண்ட பிறகுதான், நயன்தாரா நடிக்கவே ஒப்புக் கொண்டாராம்.
ஆனால் பேசியபடி அந்த கூடுதல் தொகையைத் தர இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ சிம்பு யாருமே தயாராக இல்லையாம்.
இதனால் கடுப்பான நயன்தாரா, 'கைல காசு வாயில தோச..' பாலிசிதான் சரிப்படும் என்ற நினைப்பில் படப்பிடிப்புக்கே போகாமல் நிற்கிறாராம். இயக்குநர் பாண்டிராஜுக்கு என்ன செய்வதென்றே புரியாமல் தவிக்கிறாராம்.