Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னைக்கும், எனக்கும் இடையே “இட்லி, சாம்பார்” தொடர்பு – ஹன்சிகா மகிழ்ச்சி!
சென்னை: சென்னையின் 375 ஆவது பிறந்தநாளான இன்று தனக்கும், சென்னைக்கும் இடையிலான நெருக்கத்தினைப் பற்றி மனம் திறந்துள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி.
தான் சிறு வயதிலேயே இட்லிக்கு அடிமை என்று ஹன்சிகா தனது நினைவு கூறலில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "முதல்முறை நான் சென்னைக்கு வருவதற்கு முன்பாகவே என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிகளில் இட்லிக்கு அடிமையாக இருந்துள்ளேன்.
இட்லி, சாம்பார்க்கும், எனக்குமான தொடர்பு அச்சிறுவயதிலேயே ஏற்பட்டு விட்டது.
இட்லி, சாம்பார்க்கு நான் அடிமை:
அதன்பின்னர் முதன்முதலாக சென்னையில் என்னுடைய படபிடிப்பினைத் தொடங்கிய போதுதான் நான் உணர்ந்தேன் சென்னையில் இன்னும் பல்வேறு நாவில் நீர் ஊறும் உணவு வகைகளும் உண்டு என்று.
தங்கமான மனது:
சும்மா சொல்லக்கூடாது இங்கு அனைவருமே தங்கமான மனது படைத்தவர்கள்.
மென்மையான மனிதர்கள்:
எவ்வளவு மென்மையான மனிதர்கள் இங்கு இருக்கின்றார்கள். அவர்கள் உங்களை அவர்களில் ஒருவராகவே நினைக்கத் துவங்கி விடுவார்கள்.
உழைப்பாளிகளின் நகரம்:
சென்னையை பற்றி என்னிடம் கேட்டால், சுறுசுறுப்பான, அன்பான, ஈகை உடைய, மென்மையான, உழைப்பாளிகளைக் கொண்ட ஒரு நகரம் என்றே சொல்வேன்.
எனக்கு ரொம்ப பசிக்குது:
இங்கு என்னுடைய மிகவும் பிடித்த வாக்கியமே தமிழில், "எனக்கு ரொம்ப பசிக்குது" என்பதுதான். அந்த அளவுக்கு நாவில் நீர் ஊற வைக்கின்றன உணவுகள்.
சென்னையும் என் வீடுதான்:
மும்பையில் என்னுடைய வீடு இருந்தாலும் சென்னையும் என்னுடைய வீடுதான். மெட்ராஸ் டேயான இன்று நான் சொல்ல விரும்புவது நாம் அனைவரும் சென்னையின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்.
பாரம்பரிய நகரம்:
பாரம்பரியத்தாலும், பண்பாட்டினாலும் கட்டுண்ட வேறு ஒரு நகரம் சென்னை போல எதுவும் இல்லை என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.