Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
என் பெயரை கெடுத்துவிட்டார்: சன்னி லியோனிடம் ரூ.100 கோடி கேட்டு கேஸ் போட்ட மாடல் பூஜா மிஸ்ரா
மும்பை: மாடல் பூஜா மிஸ்ரா ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சன்னி லியோன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் பூஜா மிஸ்ரா. டெல்லியில் நட்சத்திர ஹோட்டல் ஊழியரை தாக்கி சர்ச்சையில் சிக்கினார். பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனக்கு சூனியம் செய்துவிட்டதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நடிகை சன்னி லியோன் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமான போட்டியாளர். நான் அந்த போட்டியில் கலந்து கொண்ட பிறகே சன்னி லியோன் கலந்து கொண்டார். சன்னி என் மீது பொறாமைப்பட்டு எனக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையில் மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார்.
சன்னியால் பொது மக்கள் மத்தியில் என் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. இதனால் நான் என் சேமிப்பை செலவு செய்ய வேண்டியதாகிவிட்டது. எனக்கு ரூ.70 லட்சம் வரை நஷ்டம். என் பெயரை கெடுத்ததற்காக சன்னி எனக்கு ரூ.100 கோடி நஷ்டஈடு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அந்த மனு நீதிபதி நரேஷ் பாட்டில் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் வழக்கு விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.