Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழில் இசைக் கச்சேரி நடத்த ஆசைப்படும் ரம்யா நம்பீசன்
பின்னணி பாடுவதில் அதிக அக்கறை காட்டி வரும் நடிகை ரம்யா நம்பீசன், அடுத்து தமிழில் ஒரு லைவ் கச்சேரி செய்ய விரும்புகிறார். இதை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் சொல்லவும் தவறுவதில்லை அவர்.
மலையாளத்தில் கைவசம் நிறையப் படங்களை வைத்திருக்கிறார். பாடல்களும் பாடி வருகிறார்.
நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்
தமிழில் இப்போது அருள் நிதியுடன் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் நடிக்கிறார். ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
இப்படத்தை ஜே.எஸ்.கே.சதீஷ் உடன் லியோ விஷன்ஸ் மற்றும் செவன்ஜி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
நகைச்சுவை வேடம்
இப்படத்தில் ரம்யா நம்பீசன் பள்ளி ஆசிரியையாக நடிக்கிறாராம். படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' படத்தில் நான் ஒரு பள்ளி ஆசிரியையாக வருகிறேன். ‘குள்ளநரிக் கூட்டம்' படத்துக்கு பிறகு எனக்கு கிராமத்து சாயலில் ஒரு கதாபாத்திரம் அமைந்துள்ளது.
இந்த மாதிரியான நகைச்சுவை படங்களில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக காத்திருந்தேன். ஸ்ரீகிருஷ்ணா இந்தை கதையை கூறியதும் சற்றும் யோசிக்காமல் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
அருள்நிதியுடன் நடிக்க பயம்
அருள்நிதியுடன் நடிக்க ஆரம்பத்தில் பயமாக இருந்தது. பெரிய சினிமா பின்புலம் கொண்ட நடிகர் என்றாலும், அவர் அனைவரிடமும் கனிவாக நடந்து கொண்டார். இன்னமும் எனக்கு தமிழில் உச்சரிப்பு கொஞ்சம் தடுமாற்றம்தான். அப்போதெல்லாம் அருள்நிதிதான் உதவினார்," என்றவரிடம், அவரது இசை ஆர்வம், அனுபவம் குறித்துக் கேட்டோம்.
தமிழில் கச்சேரி
"இப்படத்தில் நான் எந்த பாடலும் பாடவில்லை. இருந்தாலும் காதல் கனிரசம் என்று தொடங்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மலையாளத்தில் இரண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். தமிழில் இசை நிகழ்ச்சிகள் செய்ய ஆர்வம் உள்ளது. நேரம் கூடினால் கண்டிப்பாக செய்வேன்," என்றார்.