Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மோடி யோகாவில் பங்கேற்காமல்.. பெங்களூரில் செய்த ஷில்பா ஷெட்டி.. "சித்து"வுக்காக
பெங்களூர்: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பெங்களூரில் நடந்த யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு யோகா செய்தார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தினமும் யோகா செய்யும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்கவில்லை. அவரை பெங்களூர் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்றுக் கொண்ட ஷில்பா பெங்களூரில் இன்று நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
|
பெங்களூர்
10 ஆயிரம் பேருடன் யோகா செய்தது நன்றாக இருந்தது. என்ன ஒரு வரலாற்று சிறப்புமிக்க தினம். அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள் என ஷில்பா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
யோகா
மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்கைக்கு யோகா அவசியம். சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஸ்பான்டிலிட்டிஸ் ஏற்பட்டபோது தான் யோகா செய்ய துவங்கினேன். ஸ்பான்டிலிட்டிஸை குணப்படுத்த முடியாது என்றாலும் யோகா மூலம் அது மீண்டும் வராமல் தடுக்க முடியும் என்கிறார் ஷில்பா.
|
விருக்ஷாசன்
விருக்ஷாசன் அல்லது மர போஸ் செய்தேன் என்று கூறி அந்த ஆசனம் செய்கையில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஷில்பா.
நன்றி
எனக்கு அழைப்பு விடுத்தற்கு மாண்புமிகு முதல்வர் சித்தராமையா மற்றும் ஸ்வாஸா குருஜிக்கு நன்றி என்று ஷில்பா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.