Don't Miss!
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கல்லூரியில் தமன்னா
Click here for more images |
'கேடி' படத்தின் 'லீட் லேடி'யாக அறிமுகமான தமன்னா, அதற்குப் பிறகு நடித்த ஒரே படம் 'வியாபாரி'. இடையில் சில தெலுங்குப் படங்களிலும் தலைகாட்டினார். ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.
என்ன செய்தால் கோலிவுட் கோட்டையில் ஜெயிக்கலாம் என்று மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, 'காதல்' புகழ் இயக்குநர் பாலாஜி சக்திவேலிடமிருந்து அழைப்பு வந்தது. அவ்வளவுதான், சந்தோஷத்தில் தனது கால்ஷீட் டைரியையே எஸ் பிக்சர்சிடமே எடுத்துக் கொடுத்து விட்டார்.
'கல்லூரி' படம் வெளிவரும் வரை வேறு புதுப்படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்ட தமன்னாவின் சின்ஸியாரிட்டியைப் பாராட்டிய இயக்குநர், எஸ் பிக்சர்ஸின் அடுத்த படத்திலும் கதாநாயகி வாய்ப்பை தமன்னாவுக்கே வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.
'கல்லூரி ' படத்தின் அனுபவங்களை சமீபத்தில் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் தமன்னா.
என்னைப் பொறுத்தவரை கல்லூரிதான் என்னுடைய கேரியரில் முதல் படம். அந்த அளவு சிறப்பாக வந்துள்ளது. பாலாஜி சார் நிஜமாகவே ஒரு கல்லூரி பேராசிரியர் மாதிரி பொறுமையாக, ஆனால் கச்சிதமாக கற்றுத் தருகிறார். இந்தப் படத்தில் ஹீரோ அகில் உள்பட எல்லாருமே புதுமுகங்கள்தான்.
என்னையும் ஒரு புதுமுகமாக கருதிக்கொண்டுதான் இந்தப் படத்தில் நடிக்கிறேன். கல்லூரியில் படிக்கும் ஒரு சிறிய நகரத்துப் பெண் வேடம் எனக்கு. என்னுடைய தோற்றம் எனக்கே புதிதாக உள்ளது இந்தப் படத்தில்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் சார். ஆனால் நான் இதுவரை அவரை கல்லூரி செட்டில் பார்த்த்தே இல்லை. அப்படி ஒரு நம்பிக்கை இந்தப் படத்தின் மீது அவருக்கு. அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற இயக்குநருக்கு எங்களால் முடிந்த பங்களிப்பைத் தருவோம். எஸ் பிக்சர்ஸின் அடுத்த படத்திலும் நான்தான் நாயகி என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. பேசிக் கொண்டிருக்கிறார்கள். செய்தி உறுதியானதும் தெரிவிக்கிறேன்.
இந்தப் படத்துக்காக மூன்று படங்களை மறுத்து விட்டேன். இதை மலிவான விளம்பரத்துக்காக நான் குறிப்பிடவில்லை. கல்லூரிக்குப் பின் நான் முழுநேர தமிழ் நடிகையாகிவிடுவேன்...என்றார்.
நல்ல நம்பிக்கைகள் என்றுமே வீணாவதில்லை!