என்ன பிரஷர், என்ன வேதனை, பாவம்ங்க அமலா பால்: குடும்ப நண்பர்
சென்னை: இயக்குனர் விஜய்யின் பெற்றோர்கள் அமலா பாலுக்கு அதிகம் பிரஷர் கொடுத்ததாக குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் விஜய், அமலா பால் விவாகரத்து செய்து கொள்வது பற்றி தான் கோடம்பாக்கத்தில் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திருமணமான இரண்டே ஆண்டுகளில் அவர்கள் பிரிந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து இரு குடும்பங்களுக்கும் நெருக்கமான நண்பர் ஒருவர் கூறுகையில்,

அமலா
அமலா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தது விஜய்க்கு பிடிக்காமல் இல்லை. அவர் மனைவிக்கு ஆதரவாக தான் செயல்பட்டு வந்தார். அதனால் அமலாவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

விஜய்
திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று விஜய் கன்டிஷன் போட்டிருந்தார். இருப்பினும் அமலா நடித்ததை அவர் எதிர்க்கவில்லை. சொல்லப் போனால் அவரே அமலாவை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் சென்று வந்தார். டப்பிங் பேசக் கூட உதவினார்.

குடும்பத்தார்
விஜய்யின் குடும்பத்தாருக்கு அமலா தொடர்ந்து நடிப்பது பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் தரப்பில் இருந்து ஒரே பிரஷர். அவர்கள் தன்னை நடத்தும் விதத்தை பார்த்து அமலா வேதனையில் இருந்தார்.

முடியாது
விஜய் குடும்பத்தாரின் பிரஷரை அமலாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனதளவில் நொந்து போனார். இதனாலேயே விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெறுவது என்ற முடிவுக்கு வந்தார்.


Click it and Unblock the Notifications











