Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கத்தியால் குத்தி, பெற்ற அம்மாவைக் கொன்றாரா? ஹாலிவுட் நடிகை அதிரடி அரெஸ்ட்
சென்னை: பெற்ற அம்மாவை கத்தியால் குத்திக்கொன்றதாக, கேப்டன் அமெரிக்கா படத்தில் நடித்த நடிகை கைது செய்யப்படுள்ளார்.
கேப்டன் அமெரிக்கா- தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர் என்ற ஹாலிவுட் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர் மோலி ஃபிட்ஸ்ஜெரால்டு (38).
அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தைச் சேர்ந்த இவர், நடிகையும், தயாரிப்பாளரும் ஆவார். கேப்டன் அமெரிக்கா படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த அவர், அந்தப் படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
கே.ஜி.எஃப் அளவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்குமா அவனே ஸ்ரீமன் நாராயணா
கன்சாஸ் நகரம்
இவரது தனது அம்மா பேட்ரீஸியா ஃபிட்ஸ்ஜெரால்டுடன் கன்சாஸ் நகரத்தில் இருந்து 22 மைல் தூரத்தில் ஒலாத்தே என்ற பகுதியில் வசித்து வந்தார்.
— Olathe Police (@OlathePolice) December 31, 2019 |
உயிரிழப்பு
இந்நிலையில், பலத்த ரத்தக்காயங்களுடன் கடந்த மாதம் 20 ஆம் தேதி வீட்டில் உயிரிழந்து கிடந்தார், அம்மா பேட்ரீஸியா. அவர் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
திடீர் கைது
ஒன்றும் துப்புக்கிடைக்காத நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த மோலியை, போலீசார் திடீரென கைது செய்துள்ளனர். பெற்ற அம்மாவை, மோலியே கொன்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை
கொலைக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார், மோலி ஃபிட்ஸ்ஜெரால்டுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.