Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'பெப்சிக்கு ஆதரவு - அமீர் மீது நடவடிக்கை' - சொல்கிறார் சேரன்
சென்னை: பெப்சி இல்லாமல், படம் எடுக்க முடியாது என்று பேசியதற்காக இயக்குநர் அமீர் மீது நடவடிக்கை எடுப்போம், என்று இயக்குநர் சேரன் கூறினார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவரான சேரன் அவருடன் இருந்தார்.
அப்போது, 'பெப்சி இல்லாமல், படம் எடுக்க முடியாது' என்று டைரக்டர் அமீர் பேசியிருக்கிறாரே?'' என்று நிருபர்கள் கேட்டார்கள்.
அதற்கு பதில் அளித்த சேரன், "பெரிய தயாரிப்பாளர்கள் பற்றியும், பெரிய பட்ஜெட் படங்களை பற்றியுமே அமீர் பேசியிருக்கிறார். சிறு பட தயாரிப்பாளர்கள் பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
'3 பேர் 3 காதல்' என்ற படத்தின் வெளிப்புற படப்பிடிப்பின்போது, பெப்சி தொழிலாளர்கள் ஒரு வாரத்துக்கு பழைய சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்தார்கள். பிறகு, புதிய சம்பளம் கொடுத்தால்தான் வேலை செய்வோம் என்று கூறியதால், சூழ்நிலை காரணமாக அதற்கு தயாரிப்பாளர் ஒத்துப்போக வேண்டியதாகி விட்டது.
பெப்சி இல்லாமல் படம் எடுக்க முடியாது என்று அமீர் கூறியிருக்கிறார். டிஜிட்டல் சினிமா எடுப்பதற்கு மேக்கப்மேன், லைட்மேன் போன்றவர்கள் கூட தேவையில்லை. அப்படி படம் எடுத்தால், நிறைய யூனியன்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.
டிஜிட்டல் சினிமா வளர்ந்தால், 'பெப்சி' என்ன செய்யும்... பெரிய ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்," என்றார்.