twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "எந்தப் பணியையும் அப்பா ஆசியுடன்தான் தொடங்குவேன்'' - ஐஸ்வர்யா ரஜினி

    By Shankar
    |

    Danush and Aishwarya Rajini
    சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இப்போது பெரிய பட்ஜெட் படம் ஒன்றின் இயக்குநர். தன் கணவர் தனுஷ் - அமலா பால் ஜோடியாக நடிக்க, புதிய படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

    பாபா படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஐஸ்வர்யா. 'மேக்கிங் ஆஃப் பாபா' என்ற படத்தையும் அப்போது அவர் உருவாக்கினார்.

    தனுஷை திருமணம் செய்தபிறகு, செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தின் உதவி இயக்குநராக இருந்தார். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திலும் ஐஸ்வர்யா உதவி இயக்குநர் பணியைச் செய்தார்.

    அப்போதை ஐஸ்வர்யா ஒரு படத்தை இயக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியது நினைவிருக்கலாம். கடந்த 2 வருடங்களாக தனது படத்துக்கான கதையை உருவாக்கி வந்த அவர், இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

    இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவின் மாமனார் கஸ்தூரி ராஜா!

    இதையெல்லாம் விட முக்கியம், எந்த விளம்பரமும், ஆடம்பர பூஜையும் இல்லாமல் அமைதியாக படப்பிடிப்பையே தொடங்கிவிட்டார் ஐஸ்வர்யா!

    தனுஷை இயக்க முடிவு செய்தது, இயக்குநராக அவதாரமெடுத்தது குறித்து அவரிடம் கேட்டபோது, "படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட கால கனவு. ரொம்ப காலமாகவே அந்த ஆசை எனக்குள் இருந்து வந்தது. ஒரு டாக்டரின் மகள் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுவார் அல்லவா? அது மாதிரிதான். ஒரு நடிகரின் மகளான எனக்கு, இயக்க வேண்டும் என்ற ஆசை, என் ரத்தத்தில் ஊறிப்போய் இருந்தது. என் பள்ளி நாட்களிலிருந்தே நான் நிறைய எழுதுவேன்.

    'பாபா' படத்தில் நான் உதவி டைரக்டராக பணிபுரிந்ததற்கு அதுதான் காரணம். இடையில், எனக்கு திருமணம்...அப்புறம் குழந்தை என்று ஆனதால், படம் இயக்கும் ஆசையை தற்காலிகமாக தள்ளிவைத்திருந்தேன்.

    பொதுவாக நடிகர்களின் வாரிசுகள் தாங்களும் நடிகர்களாக விரும்புவார்கள். அப்படித்தான் நடந்திருக்கிறது... உங்களுக்கு நடிக்கும் ஆசை இல்லையா?

    ஒரு போதும் இல்லை. காரணம் எனக்கு எழுதுவதுதான் பிடிக்கும். ஒரு படைப்பின் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் எனக்கு ஆர்வம் அதிகம். சிறுவயதில் அப்பாவுடன் சாப்பிடும் நேரங்களில், டைனிங் டேபிளில் அமர்ந்தபடி படத்தின் கதையை விவாதித்தது நினைவிருக்கிறது. படத்தின் காட்சிகள், கேமரா கோணங்கள் பற்றியெல்லாம் அப்பா எங்களுடன் விவாதிப்பார். அப்போதிலிருந்தே ஒரு காட்சியை எந்த கோணத்தில் எடுக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் யோசிப்பேன். அதன் விளைவுதான் கல்லூரி முடிந்ததும் சுரேஷ் கிருஷ்ணாவிடம் பணியாற்ற ஆரம்பித்தேன்.

    உங்கள் புதுப் பட கதையை ரஜினி சாரிடம் சொல்லியிருக்கிறீர்களா...

    இந்தப் படத்தின் கதைக் கருவை மட்டும் சுருக்கமாக அப்பாவிடம் சொன்னேன். அதில் அவருக்கு அழுத்தமான நம்பிக்கை பிறந்துவிட்டது. பின்னர் சமீபத்தில் நான் தொடங்கப் போவதாக அவரிடம் சொன்னதும் அவருக்கு ஒரு சந்தோஷ ஷாக். இன்னொன்று, இந்த மாதிரி சிம்பிளாக படம் தொடங்கியதில் அவருக்கு தனி மகிழ்ச்சி.

    அவர் ஆசியுடன்தான் இந்த படத்தைத் துவங்கியுள்ளேன். நான் எந்த ஒரு வேலையை தொடங்கினாலும், அப்பாவிடம் ஆசி பெற்றபின்தான் ஆரம்பிப்பேன். இப்போதும் அப்படித்தான். எப்படி இயக்க வேண்டும்? என்று சில அறிவுரைகளை கூறினார். சில யோசனைகளை சொன்னார். 'எதைச் செய்தாலும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்...' என்றார்.

    English summary
    Aishwarya Rajini has launched her untitled directorial venture with Danush - Amala Paul on Fridaya without any publicity and fanfare.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X