Don't Miss!
- News
'புதுசா கட்டி அதுக்கு புது பெயர் வச்சிக்கோங்க'.. முகல் கார்டன் பெயர் மாற்றம்.. காங்கிரஸ் கடும் கண்டனம்
- Technology
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
எம்.எஸ்.வி, டி.எம்.எஸ்க்கு எல்லாம் ரொம்ப நெருக்கம்.. கலைமாமணி வாமனனின் பிரத்யேக பேட்டி!
சென்னை: ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சிக்கு சரியான பொருத்தமுள்ள ஆள் என்றால் அது திரை மேதை வாமனன் சார் தான்.
மறைந்த தமிழக முதல்வர்களான எம்.ஜி.ஆர், மு. கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரது அன்பையும் பெற்றவர் எழுத்தாளர் வாமனன்.
திரை இசைக் கலைஞர்களின் வாழ்க்கை குறித்தும் அவர்கள் படைப்பு குறித்தும் ஏகப்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார்.

கலைமாமணி வாமனன்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளார். இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான வாமனன் நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டின் ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் பற்றியும் அவர் இசையமைத்த பாடல்கள் குறித்தும் ஏகப்பட்ட கட்டுரைகளையும் புத்தகங்களையும் அவர் கூடவே பயணித்து எழுதி உள்ளார் வாமனன். சில பாடல்கள்களையும் அவரது இசைக்காக எழுதி கொடுத்துள்ளார். விஸ்வநாதனன் ராமமூர்த்தியை கொண்டாடும் விதத்தில் மெல்லிசை மன்னர்கள் பாட்டு பயணம் எனும் புத்தகத்தில் அவர்களை பற்றிய முழு விபரங்களையும் எழுதிய பெருமை தனக்கு கிடைத்தது என பேசியுள்ளார்.
டி.எம். செளந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன் இசையிலேயே ஒரு சமயம் டி.எம். செளந்தரராஜன் பாட மறுத்த சுவாரஸ்ய தகவலையும் இந்த பேட்டியில் அம்பலப்படுத்தி உள்ளார் வாமனன். மேலும், எம்.எஸ்.விக்கும் டி.எம்.எஸ்க்கும் இடையே இருந்த அழகான நட்பு பற்றியும் அவர்களை போன்ற அவதார புருஷர்கள் இனியும் பிறப்பார்களா என்பது சந்தேகம் எனவும் கூறியுள்ளார்.
விரைவாக மெட்டமைப்பதில் வல்லவர்
இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் உடனான தன்னுடைய உறவு குறித்தும் இந்த பேட்டியில் மனம் திறந்துள்ளார் வாமனன். விரைவாக மெட்டமைப்பதில் அவர் மிகவும் வல்லவர் என்றும் அருமையான எண்ணற்ற இசைப் பாடல்களை தமிழ் உலகிற்கு இவர்கள் கொடுத்துள்ளார் என்றும் பேசியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!