Just In
- 5 min ago
பாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்!
- 15 min ago
நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்!
- 28 min ago
2 வாரத்திலும் வசூல் வேட்டை.. 200 கோடி கிளப்பில் இணைந்த மாஸ்டர்.. தெறிக்கும் #MasterEnters200CrClub
- 37 min ago
பாவாடை, தாவணியில் அப்படி வெட்கம்.. வேற லெவல் எக்ஸ்பிரஷனில் ஹீரோயின்.. வைரல் போட்டோஸ்!
Don't Miss!
- Lifestyle
இதயத்துல அடைப்பு இருக்கா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்...
- News
டிரம்பின் பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கம்.. இனி பேஸ்புக்கின் உச்ச நீதிமன்றம் கையில்..! பரபரப்பு
- Sports
5 விக்கெட் எடுத்ததும் ஓடிப் போய் பும்ராவை கட்டிப் பிடிச்சுக்கிட்டேன்... சந்தோஷம் தாங்கல!
- Finance
ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. 49,300க்கு அருகில் வர்த்தகம்.. என்ன காரணம்..!
- Automobiles
ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
படமெடுக்காத தயாரிப்பாளர்கள்தான் பிரச்சினை பண்ணுகிறார்கள்! - அமீர் பரபரப்பு பேச்சு

சினிமா உலகில் அனைவருக்கும் தெரிந்த, ஆனால் யாரும் வெளியில் பேசத் தயங்கும் இந்த உண்மையை ஒரு விழாவில் பளிச்சென்று போட்டுடைத்துவிட்டார் அமீர்.
புதுமுகங்கள் ஆரி-சுபா ஜோடியாக நடித்து, நாராயண் நாகேந்திரராவ் டைரக்டு செய்துள்ள படம், 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே.' இந்த படத்தை ஸ்ரீலட்சுமி நரசிம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சி.எச்.மயூரி சேகர் தயாரித்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
இயக்குநர்கள் சேரன், அமீர், மிஷ்கின், பிரபு சாலமன், பிரபாகர், அறிவழகன், தாமிரா, பாலாஜி மோகன் ஆகிய 8 டைரக்டர்கள் சேர்ந்து பாடல்களை வெளியிட, அவர்களிடம் உதவி டைரக்டர்களாக இருந்தவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
விழாவில், அமீர் பேச்சுதான் ஹைலைட். அவர் கூறுகையில், "சிறு பட தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம், இந்த படத்தின் தயாரிப்பாளர். அவர் பேசும்போது மிகவும் சந்தோஷமாக பேசினார். படம் தயாரிப்பவர்களும், வேலை செய்பவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
படம் தயாரிப்பவர்கள், படம் தயாரிக்க தயாராக இருக்கிறார்கள். தொழிலாளர்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். படமே தயாரிக்காமல் சும்மா இருப்பவர்கள்தான் பிரச்சினை செய்கிறார்கள்.
ஒரு மணி நேரத்தில்...
ஒரு மணி நேரத்தில் பேசி, முடிய வேண்டிய பிரச்சினை. படம் எடுக்காதவர்கள் பிரச்சினையை பெரிதாக்கி, அதை தீர்க்கவிடாமல் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்,'' என்றார்.
இயக்குநர் சேரன் கூறுகையில், "நான் சாமி கும்பிட மாட்டேன். என் முன்னோர்களை மனசுக்குள் நினைத்துக் கொள்வேன். அது, எங்க அம்மாச்சியாகக் கூட இருக்கலாம். தயாரிப்பாளர்கள்-தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சினை தீர வேண்டும் என்று மனசுக்குள் பிரார்த்திக்கிறேன்.
இந்த பிரச்சினையை சீக்கிரம் பேசி முடிக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களுக்கு நட்சத்திர கிரிக்கெட் மீது மோகம் வந்துவிடும். அமீர்கானும், சல்மான்கானும் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தால், அதைத்தான் பார்ப்பார்கள். அப்படி கிரிக்கெட் மீது மோகம் ஏற்படாமல் இருக்க, பட அதிபர்கள்-பெப்சி பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும்,'' என்றார்.
தயாரிப்பாளர் மயூரி சேகர் வரவேற்றுப் பேசினார். இயக்குநர் நாராயண் நாகேந்திரராவ் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை, பிஆர்ஓ நிகில் முருகன் தொகுத்து வழங்கினார்.