twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கலங்க நா கோழையில்லே, களத்திலே இறங்கி காளபோல... ' - இது இன்று வெளியான சந்தானம் பாட்டு!!

    By Shankar
    |

    விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் பாடல் வரிகளை இன்று வெளியிட்டுள்ளனர்.

    கதாநாயகன் சந்தானத்தின் அறிமுக பாடல் வரிகள் இவை.

    "கலக்கு மச்சா டவுளத்துள
    கால வாரும் காலத்திலே
    கலங்க நா கோழையில்லே "
    களத்திளே இறங்கி காளபோல
    ரைட்டு தாட்டு உள்ளத்திலே
    வெச்சு இருக்கும் நல்ல புள்ள

    Santhanam's intro song lyric

    சிம்பு இசை அமைக்க ரோகேஷ் பாடல் எழுத அனிருத் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குநர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோர் இப்பாடலுக்கு பணியாற்றினார்.

    நவம்பர் மாதம் திரைக்கு வரும் இப்படத்தை ஜிஎல் சேதுராமன் இயக்கத்தில் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய படதொகுப்பை ஆன்டனி செய்கிறார்.

    முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிக்க சம்பத் ராஜ், ரோபோ சங்கர், சஞ்சனா சிங், விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் சிம்பு இசையில் யுவன் ஷங்கர் ராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். நவம்பர் 14 தேதி சத்யம் திரை அரங்கில் இசை வெளியீட்டு விழா நடக்கிறது.

    English summary
    Santhanam's Sakka Podu Podu Raja movie intro song lyric has released
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X