Don't Miss!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எந்திரன் விழாவில் அமைச்சர் சுப்ரமணியத்துக்கு அவமரியாதை-மலேசியத் தமிழர்கள் அதிருப்தி
கோலாலம்பூரில்: நடந்த எந்திரன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் மலேசிய நாட்டு அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவருமான டாக்டர் சுப்ரமணியம் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக மலேசியத் தமிழர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்போது தமிழக அரசு டாக்டர் சுப்ரமணியத்திற்கு உரிய கெளரவத்தையும், மரியாதையையும் கொடுத்திருந்த நிலையில், ஒரு சினிமாப் பட விழாவில் அமைச்சர் சுப்ரமணியம் அவமரியாதை செய்யப்பட்ட செயல் கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக மலேசிய தமிழர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் எந்திரன் பட ஆடியோ வெளியீடு நடைபெற்றது. தமிழகத்தில் நடத்தாமல் இதை மலேசியாவில் நடத்தப் போவதாக செய்திகள் வெளியானதால், தமிழகத்திலேயே கூட திரையுலகினர் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது.
இந்த நிலையில் புத்ரஜெயா மாநாட்டுக் கூடத்தில் நடந்த பிரமாண்டமான ஆடியோ விழாவில் மலேசிய நாட்டு தமிழர் தலைவரும், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான சுப்ரமணியமும் அழைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு விழாவில் அவமரியாதை நடந்துள்ளதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அவரை மேடையில் அமர வைக்கவில்லை. மாறாக பார்வையாளர் வரிசையில் உட்கார வைத்து விட்டனர். அது போக, விழாவின்போது பலரும் பேசினர். ஆனால் சுப்ரமணியம் மட்டும் பேச அழைக்கப்படவில்லை.
தங்கள் நாட்டுக்கு வந்து விழாவை நடத்தி விட்டு, தங்களது அமைச்சரையே அவமதிக்கும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடந்து கொண்டிருப்பதாக மலேசியத் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.