Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
மீண்டும் 1 கோடி சம்பளம் பெறும் ராஜமௌலியின் அப்பா... லாரன்ஸ் படத்திற்கு கதாசிரியர்!
Recommended Video
சென்னை : வசூலில் உலகம் முழுவதும் பல புதிய சரித்திரம் படைத்த 'பாகுபலி' படத்தின் கதையை எழுதியவர் விஜயேந்திர பிரசாத்.
'பாகுபலி' படத்தின் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் அப்பாவான இவர், பாகுபலி படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 'மெர்சல்' படத்தின் கதையிலும் தன் பங்களிப்பு செய்தார்.
'மெர்சல்' படத்திற்காக விஜயேந்திர பிரசாத்துக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ராகவா லாரன்ஸ் படத்துக்கு
இந்தப் படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கு கதை எழுத ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜயேந்திர பிரசாந்த். லாரன்ஸின் 'காஞ்சனா 3' படத்திற்குப் பிறகு இந்தப் படம் உருவாக இருக்கிறது.
தமிழிலும் வெளியாகும்
லாரன்ஸ் நடிக்கவிருக்கும் இந்தப் படம் தெலுங்கில் உருவாகிறது. தமிழில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். மகாதேவ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.
மதன் கார்க்கி வசனம்
தமிழில் பல படங்களை தயாரித்துள்ள 'கேமியோ ஃபிலிம்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. விஜயேந்திர பிரசாத்தின் கதையில் தயாராக உள்ள இப்படத்தின் தமிழ்ப்பதிப்புக்கு மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார்.
1 கோடி சம்பளம்
இந்தப் படம் குறித்த மற்ற தகவல்களை விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்கும் விஜயேந்திர பிரசாத்துக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.