twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' - சென்னை நீதிமன்றம் தடை

    By Shankar
    |

    சென்னை: வாங்கிய கடனை திருப்பித் தராததால், கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    சென்னை வடபழனியைச் சேர்ந்த அய்யாத்துரை என்பவர், சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' என்ற படத்தை சம்பூர்ணம் இயக்குகிறார். அந்தப் படத்தில் அவரது மகள் புவனேஸ்வரி நடிக்கிறார். இந்த நிலையில், அந்த படத்துக்காக என்னிடம் 8.1.10 அன்று அவர்கள் ரூ.7.20 லட்சம் கடன் வாங்கினார்கள்.

    எங்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, படத்தை வெளியிடுவதற்கு முன்பு கடனை அவர்கள் திருப்பித் தந்திருக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தப்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை.

    இந்த நிலையில் இந்த சினிமாப் படத்தை 11-ந் தேதி (நாளை) வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான விளம்பரம் கடந்த 30.10.11 அன்று பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. எனக்கு கடனை திருப்பித்தராமல் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்தால் பாதிக்கப்படுவேன். எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை 17-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சரவணன் விசாரித்தார். அந்த படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். எனவே இந்தப் படம் இந்த வாரம் வெளியாகவில்லை.

    English summary
    The Chennai City Civil court ordered an interim stay on the release of Tamil movie Konjam Sirippu Konjam Kobam on Wednesday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X