Just In
- 17 min ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 38 min ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
- 1 hr ago
செண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்!
Don't Miss!
- Sports
இவங்களை எதுவும் செய்ய முடியலை.. விரக்தி அடைந்த ஆஸ்திரேலியா.. கையில் எடுத்த "அந்த" மோசமான யுக்தி!
- News
டெல்லி டிராக்டர் பேரணிக்கு உ.பி. விவசாயிகள் ரெடி..பல ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பங்கேற்க முடிவு!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Finance
பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..!
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' - சென்னை நீதிமன்றம் தடை
சென்னை வடபழனியைச் சேர்ந்த அய்யாத்துரை என்பவர், சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' என்ற படத்தை சம்பூர்ணம் இயக்குகிறார். அந்தப் படத்தில் அவரது மகள் புவனேஸ்வரி நடிக்கிறார். இந்த நிலையில், அந்த படத்துக்காக என்னிடம் 8.1.10 அன்று அவர்கள் ரூ.7.20 லட்சம் கடன் வாங்கினார்கள்.
எங்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, படத்தை வெளியிடுவதற்கு முன்பு கடனை அவர்கள் திருப்பித் தந்திருக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தப்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் இந்த சினிமாப் படத்தை 11-ந் தேதி (நாளை) வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான விளம்பரம் கடந்த 30.10.11 அன்று பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. எனக்கு கடனை திருப்பித்தராமல் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்தால் பாதிக்கப்படுவேன். எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை 17-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சரவணன் விசாரித்தார். அந்த படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். எனவே இந்தப் படம் இந்த வாரம் வெளியாகவில்லை.