Don't Miss!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஒரே நேரத்தில் தொடங்கப்பட்ட ஏழு புதுப் படங்கள்
ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் ஏழு புதிய படங்களைத் தயாரிக்கிறது.
நிறுவனத்தின் பெயர் பாஃக்ஸ் அண்ட் க்ரோவ் ஸ்டூடியோ.
1.ஜனவரி மழையில் ஒரு ஹாய்
2.கடவுள் இருக்கான் குமாரு
3.லந்து
4.கொள்ளக் கூட்ட பாஸ்
5.வட்டச் செயலாளர் வண்டு முருகன்
6.நீங்க புடுங்கிற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணிதான்
7.கோக்
இந்த 7 படங்களின் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.
இந்த ஏழு படங்களும் காமெடியை பின்னணியாகக் கொண்டு குறுகிய கால தயாரிப்பில் சிறு பட்ஜெட் படங்களாக தயாராகவுள்ளன.
படங்களின் கதையையும் ராஜேஷ் கண்ணன் எழுதியதோடு மட்டுமல்லாமல் அவற்றில் ‘ஜனவரி மழையில் ஒரு நாள்' மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். ஏற்கெனவே இவர் பெருமான் என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார்.
இதுகுறித்து ராஜேஷ் கண்ணன் பேசுகையில், "எனக்கு சினிமா என்றால் உயிர். ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். பல வேலை பார்த்திருக்கிறேன்.
சினிமாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. அஜித் எனக்கு நல்ல நண்பர். ஒருநாள் கேட்டார். வாழ்க்கையில் என்ன ப்ளான் வச்சிருக்கேன்னு.
நான் பல வேலை செய்வதை சொன்னேன். இப்படி பலவற்றில் ஈடுபடுவது சரியாக இருக்காது. ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். அல்லது ஒரு நிறுவனம் ஆரம்பித்து செய்ய வேண்டும்.
அதற்கு முதலில் தேவை விசிட்டிங் கார்டு என்று தெளிவு படுத்தி தொடங்கி வைத்தார்.
அதை மறக்க மாட்டேன். நான் பலரிடம் கதை சொல்லி 52 கதைகள் உருவாக்கிவிட்டேன். ஒருகட்டத்தில் சலித்துவிட்டு இம் முயற்சியில் ஈடுபட முடிவு செய்தேன். நண்பர்கள் கை கொடுத்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை எல்லாமே மேட் இன் ப்ரண்ட்ஷிப் என்றுதான் சொல்வேன். புதியதை வரவேற்கத் தயாராக இருக்கும் ரசிகர்களை நம்பி இறங்கியிருக்கிறோம்," என்றார்.