Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கணவன், மனைவி உறவு... 'அதையும் தாண்டி புனிதமானது'!
கணவன், மனைவி உறவை பற்றி பேசும் படம் 'அதையும் தாண்டி புனிதமானது'.
சென்னை: கணவன், மனைவி உறவை பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது ' என்ற திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
வேல்ஸ் மூவீஸ் பேனரில் திரு.பழனிவேல் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சினிமா மேல் தணியாத ஆசைகொண்ட, சமூகத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் சிலர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள், விவசாயிகள் சிலரும் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஆர்.வெங்கட்டரமணன். இவர் 'அப்பா ..வேணாம்ப்பா..' என்ற சமூகத்தின் நலன் சார்ந்த திரைப்படத்தை இயக்கியவர்.
இந்த படம் கணவன், மனைவிக்கு நடுவில் இருக்கும் உறவு பற்றி பேகிறது. படம் குறித்து இயக்குனர் ஆர்.வெங்கட்ரமணன் கூறியதாவது, "இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது. நாகரிகத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணும் நட்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஆண், பெண் உறவுகள் தவறாகப்போனால் குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்பதை பற்றி சொல்லியுள்ளோம்" என்றார்.
புதுமுகங்கள் ஜெய், கெளதம், வீன்ஷெட்டி, ஹேமா, சஞ்சனா போன்றோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வேதா செல்வம் ஒளிப்பதிவாளராகவும், ராஜேஷ்கண்ணன் எடிட்டராகவும் , வி.கே.கண்ணன் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த திரைப்படத்தின் பாடல்களை வைரபாரதி ,வெங்கடசுப்பு, நாக முருகேசன் எழுதி உள்ளனர்.
இந்த திரைப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.