Don't Miss!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- News பாஜக - விசிகவினர் இடையே அடிதடி.. 2 நிர்வாகிகளின் மண்டை உடைப்பு.. அரியலூரில் பதற்றம் - போலீஸ் குவிப்பு
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
தலைவன் இல்லாத இயக்கமே நேர்மையான இயக்கம் - நடிகர் கமல்ஹாசன்
விவசாயிகளின் பிரச்சனை குறித்து நாம் பேச வேண்டும்; விலங்குகளின் நலம் குறித்த விதிகளை ஒழுங்கு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்
சென்னை: மாணவர் போராட்டம் தலைவர் இல்லாததால் திசைமாறியது என்பது தவறு; தலைவர் இல்லாத இயக்கம்தான் நேர்மையானது; என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னையில் நடிகர் கமல்ஹாஸன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
விவசாயிகளின் பிரச்சனை குறித்து பேசவும் இந்த ஜல்லிக்கட்டு புரட்சி நடந்திருக்கலாம். வேர் இதுதான். அதற்கான களமாக ஜல்லிக்கட்டு அமைந்தது.
இத்தனை பேர் இறந்த பிறகும் விவசாயிகளின் பிரச்சனை குறித்து பேசாமல் இருப்பது நமக்கு நாமே அழிவை உருவாக்கிக்கொள்வது ஆகும்.
அதேபோல், மாணவர்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என்று போராடுவது அவர்கள் உரிமை. அதை சரியென்றும் தவறென்றும் சொல்வதற்கு நான் யார்?
அதேபோல் பீட்டாவை தடை செய்ய வேண்தும் என்று கூறினால், வேறு ஒரு பெயரில் இன்னொரு விலங்குகள் நல அமைப்பு உருவாகும்.
ஒரு அமைப்பு வேண்டாம் என்று சொல்வதை விட, அதை ரெகுலேட் செய்வது குறித்து யோசிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசு போராட்டத்துக்கு பிறகு தன்னால் இயன்றதை சரியாக செய்தது என்பது என் கருத்து.
அதேபோல், தலைவன் இல்லாததால் போராட்டம் இறுதியில் திசைமாறியது என்று சொல்வது தவறு. தலைவனை விட, இதையெல்லாம் தொகுத்து சொல்ல ஆட்கள் இருந்தால் போதும். தலைவன் இல்லாத இயக்கம் நேர்மையான இயக்கம்.
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.