Just In
- 43 min ago
பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
- 49 min ago
அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!
- 56 min ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 1 hr ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
Don't Miss!
- Sports
8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்!
- News
டென்ஷனில் எடப்பாடியார்.. :"அந்த" பக்கம் "இந்த" பக்கம் சாஞ்சுராதீங்க.. பொறுமையா இருங்க.. ஒரே அட்வைஸ்!
- Lifestyle
பார்வையையே இழக்கச் செய்யும் கண் அழுத்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
- Automobiles
கோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆளப்போறான் தமிழன்... மெர்சலாக்குமா... மிரண்டு நிக்குமா?
டைம் டு லீட் என்ற உப தலைப்புடன் வந்த விஜய்யின் தலைவா என்ன ஆனது என்பது ஊருக்கே தெரிந்த சமாச்சாரம். தலைவாவுக்குப் பிறகு விஜய்யிடமிருந்து அரசியல் குரல் எதுவும் வரவே இல்லை, ஜெயலலிதா மரணமடைந்த சில தினங்கள் வரை.
அதன் பிறகுதான் அரசி அரசியல், விவசாயிகள் பிரச்சினை என பேச ஆரம்பித்தார் விஜய். அவர் தந்தை ஒருபடி மேலே போய் நாளைய தலைவர் விஜய் என நான்கைந்து மேடைகளில் பேசிவிட்டார்.

மீண்டும் விஜய்க்கு அரசியல் ஆர்வம் வந்துவிட்டது என அவரது ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கொண்டாட ஆரம்பித்துவிட்ட நிலையில், இப்போது தனது அடுத்த படத்தில் 'ஆளப்போறான் தமிழன்...' என ஒரு பாடலை வைத்துள்ளார். அதை நாளை ரிலீசும் பண்ணுகிறார்.
இந்த தகவல் விஜய் ரசிகர்களை ஆனந்தக் கூத்தாட வைத்துள்ளது. 'இந்தப் பாடல் மூலம் எங்களுக்கு செய்தி சொல்லிவிட்டார் தளபதி' என கருத்துப் பதிகிறார்கள். பேனர் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மீண்டும் விஜய் மக்கள் இயக்கக் கொடிகள் வீதிகளில் பறக்க ஆரம்பித்துள்ளன.

அப்போது ஜெயலலிதா இருந்தார்; விஜய் அமைதி காத்தார்.. இனி அதற்கு அவசியமில்லையே என்கிறார்கள் நடுநிலையாளர்கள். ஆனால் திரையுலகினரோ, 'ஜெயலலிதாவை விட கடுமையாக நடந்து கொள்ளக் கூடியவர்கள்தான் இப்போதுள்ளவர்கள். இது தெரியாமல் அரசியல் ஆழம் பார்க்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள்... இப்போது ஆர்வத்துடன் அரசியலுக்கு வருபவர்கள் என்னென்ன சோதனைகளைச் சந்திக்கப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்," என்கிறார்கள்.
எப்படியோ... சேஃபா விளையாடுங்கப்பா!