Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
“மக்களுக்கு சகிப்புத்தன்மை தேவை” – பிகே மீதான மனு தள்ளுபடி!
டெல்லி: பிகே படத்தின் மேலாக தொடுக்கப்பட்ட வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அமீர் கான் அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து நடித்த "பிகே" திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த படத்தில் இந்து மதத்துக்கு எதிரான காட்சிகள் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி படத்துக்கு தடை விதிக்கும்படி டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறையும் சகிப்புத்தன்மை:
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரோகிணி தலைமையிலான அமர்வு, "சமீபகாலமாக நம் நாட்டின் மதம் தொடர்பான விஷயங்களில் மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. குறிப்பிட்ட சில விஷயங்களில் சகிப்புத்தன்மை அவசியம்.
கிள்ளி எறிய வேண்டும்:
சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது ஆபத்தான போக்கு. இதுபோன்ற நடைமுறையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில் காட்டுத்தீ போல பரவி நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.
உண்மையான விஷயங்கள்:
இந்த மனு கூட சகிப்புத்தன்மை இன்றி தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நடக்கும் உண்மையான விஷயங்களை கலைஞர்கள் திரையில் பிரதிபலிப்பதற்கு நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தனிநபரின் உரிமை:
ஒரு படத்தைப் பார்ப்பதும், பார்க்காமல் இருப்பதும் தனிப்பட்ட நபரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. கட்டாயமாக படம் பார்க்கும் படி யாரும் யாரையும் வற்புறுத்தவில்லை.
600 கோடி ரூபாய் வசூல்:
இந்த படம் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இதன் மூலம் இந்த படத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது உறுதியாகியுள்ளது.
மோசமான சம்பவங்கள்:
சமூகத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களைத் தடுப்பது குறித்து தான் இந்த படத்தின் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
மனு தள்ளுபடி:
எனவே இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை வெட்டவோ அல்லது இந்த படத்தை வெளியிடத் தடையோ விதிக்க முடியாது. எனவே, இம்மனுவானது தள்ளுபடி செய்யப்படுகின்றது" என்று உத்தரவிட்டனர்.