பெண்ணுடன் ஆபாச பேச்சு.. விஜய் பட நடிகருக்கு பெரிய சிக்கல்.. கமெண்ட்ஸ் செக்ஷனை ஆஃப் பண்ணிட்டாரே?
கொச்சி: நடிகர் அஜ்மல் அமீருக்கு எதிரான பாலியல் பேச்சு சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அஞ்சாதே படத்தின் மூலம் பிரபலமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரைப் பற்றிய ஆடியோ பதிவுகளும், வீடியோ அழைப்புக் காட்சிகளும் தற்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளன.
"என்டே கேசட்" என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜ்மல் அமீரின் வீடியோ அழைப்புக் காட்சிகளும், தொலைபேசி உரையாடலின் பதிவுகளும் வெளியாகியுள்ளன. இந்த உரையாடல்கள் நடிகர் அஜ்மல் பாலியல் ரீதியாகப் பேசியதாகக் கூறப்படுகின்றன. ஒரு பெண், அஜ்மல் அமீரிடம் அவரது திருமணத்தைப் பற்றிக் கேட்கிறார், அதற்கு அஜ்மல் "அதையெல்லாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?" என்று எதிர்வினையாற்றுகிறார். மேலும், "தங்குவதற்கான இட வசதியை ஏற்படுத்தித் தருகிறேன்" என்றும் அவர் கூறுகிறார்.
இந்த விவகாரம் குறித்து அஜ்மல் அமீர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக விமர்சனங்களும், மீம்களும் பகிரப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அஜ்மல் தனது சமூக வலைத்தளப் பக்கங்களின் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார்.

ஆதரவான கருத்து: அதேவேளையில், அஜ்மல் அமீருக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுகின்றன. வெளியான வீடியோ அழைப்பு மற்றும் தொலைபேசி உரையாடலின் ஒரு சிறு பகுதி மட்டுமே பகிரப்பட்டுள்ளது. அஜ்மல் அந்தப் பெண்ணை தொந்தரவு செய்ததாகத் தெரியவில்லை என்றும், இது இரு தரப்பினரின் சம்மதத்துடன் நடந்த உரையாடல் என்றும் பலரும் கருதுகின்றனர். வீடியோ அழைப்பின்போது அந்தப் பெண் சிரிப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். அஜ்மல் அமீரை குறை கூறுவதற்கு முன் உண்மை நிலையை முழுமையாக அறிய வேண்டும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. பரஸ்பர நம்பிக்கையுடன் நடந்த ஒரு தனிப்பட்ட உரையாடலை, ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது போல் தெரிகிறது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த பதிவுகளை வெளியிட்டவர் "என்டே கேசட்" என்ற பக்கத்தை நடத்தும் அப்துல் ஹக்கீம் என்பவர் ஆவார்.
பின்னணி: அப்துல் ஹக்கீம் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதையும் சமூக வலைத்தளங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கொச்சியில் ஒரு ஹோட்டலில் ஒரு தம்பதியினரைத் தாக்கியதுடன், கேள்வி கேட்ட கணவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியுடன் செல்ஃபி எடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜ்மல் அமீர், கதாநாயகன், துணை நடிகர் மற்றும் வில்லன் எனப் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஒரு நேர்காணலில், தான் கதாநாயகன் அல்லாத வேறு எந்த கதாபாத்திரங்களையும் தற்போது ஏற்க விரும்பவில்லை என்று அஜ்மல் அமீர் கூறியிருந்தார். கடைசியாக தமிழில் விஜய்யின் கோட் படத்தில் நடித்திருந்தார்.



Click it and Unblock the Notifications











