Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
வாவ்... சூப்பர் போட்டி கார்த்தி... இந்த செயலுக்காக நிச்சயம் விவசாயிகள் உங்கள மனசார பாராட்டுவாங்க!
விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நடிகர் கார்த்தி, பரிசு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
சென்னை: விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் சிறு கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.
நடிகர் சிவகுமாரின் இளையமகனான கார்த்தியும், அவரது அண்ணன் நடிகர் சூர்யாவும், நடிப்பதை தாண்டி பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகின்றனர். அகரம் புவுண்டேஷன் மூலம் நடிகர் சூர்யா ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளித்து வருகிறார்.
'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் விவசாயியாக நடித்த பிறகு, உழவன் அறக்கட்டளை எனும் அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார் கார்த்தி. விவசாயத்தின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக, சொந்த ஊரில் இயற்கை விவசாயமும் செய்து வருகிறார்.
இந்நிலையில், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார் நடிகர் கார்த்தி. இதுகுறித்து அவர் கூறியதாவது, "விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டதே இந்த அமைப்பு. விவசாயிகளை பாராட்டும் பொருட்டு இந்த அமைப்பின் மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும்.
Bigil: டீசரும் இல்ல டிரெய்லரும் இல்ல.. ஆனா இன்று முக்கிய அப்டேட் வருது... ரெடியாகுங்க விஜய் ரசிகாஸ்!
மேலும், உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளை கண்டுபிடிக்கும் போட்டிகளை அறிவித்திருக்கிறோம். சிறு, குறு விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும்", இவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார்.
தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' படம் வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து, ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.