இன்மை ஆர்வத்தை அதிகரிக்கும்… ‘நவரசா‘படம் குறித்து சித்தார்த்தின் ருசிகரத்தகவல் !
சென்னை : நவரசாவில் இன்மை எபிசோடில் நடித்திருக்கும் சித்தார் அப்படம் குறித்து மனம் திறந்து பேசினார்.
Recommended Video
பயத்தை உணர்த்தும் இன்மை என் வார்த்தையை கேட்கும் போது மக்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றார்.
மேலும், கொரோனாவால் இன்னலுக்கு ஆளாகி உள்ள திரைத்துறை தொழிலாளர்களுக்காக இத்திரைப்படம் உருவாகி உள்ளதாக நடிகர் சித்தார் கூறினார்.

நெட்ஃப்ளிக்ஸில்
ஓடிடி தளங்கள் பிரபலமடைந்துள்ளதால், ஓடிடி தளத்தில் வெளியாவதற்கென்றே படங்களும், வெப் சீரிஸ்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ள 'நவரசா' ஆந்தாலஜி தயாராகியுள்ளது. ஒன்பது பேர், ஒன்பது தனித்தனி கதைகளை இதற்காக இயக்குகின்றனர்.

9 குறும்படங்கள்
நவரசா ஆந்தாலஜி. கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக்நரேன், வசந்த் சாய்,கார்த்திக்சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன்பிரசாத் என 9 இயக்குனர்கள், கித்தார் கம்பி மேலே நின்று,சம்மன் ஆஃப் 92,பீஸ், இன்மை, துணிந்த பின், ப்ராஜெக்ட் அக்னி, ரௌத்திரம், எதிரி, பாயாசம் என 9 குறும்பங்கள் உருவாகி உள்ளன.

9 குணாதிசயங்கள்
கோபம், சிரிப்பு, காதல், வியப்பு, வெறுப்பு, ஆச்சர்யம் போன்ற 9 உணர்வுகளை அடிப்படையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த்சாமி, சித்தார்த், பாபி சிம்ஹா, ரேவதி, ரோகினி, அதிதி பாலன், ரிவித்விகா, யோபி பாபு, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.,

மனம் திறந்தார்
நவரசா குறும்படத்தில் இன்மை என்ற குறும்படத்தில் நடித்த சுவாரசியமான அனுபவத்தை நடிகர் சித்தார் பகிர்ந்து கொண்டார். மணிரத்னம், ஜெயேந்திரா அவர்கள் இன்மை படத்தில் நடிக்க வாய்ப்பளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இன்மை என்பதின் அர்த்தம், பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாததாகும்.

ஆர்வத்தை அதிகரிக்கும்
இன்மை என் வார்த்தையை கேட்கும் போது மக்களின் ஆர்வம் அதிகரிக்கும், கொரோனாவால் இன்னலுக்கு ஆளாகி உள்ள திரைத்துறை தொழிலாளர்களுக்காக இத்திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் ரவீந்திரன் பிரசாத், நடிகை பார்வதி ஆகியோர் இணைந்து நடித்தது ஒரு அற்புதமான அனுபவம் என்று சித்தார் கூறினார்.


Click it and Unblock the Notifications











