Don't Miss!
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
வரி விலக்கு விவகாரம்.. தீர்ப்பை எதிர்த்து.. அப்பீல் செய்கிறாரா நடிகர் விஜய்? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கில் நீதிபதியின் கருத்தை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். உலகம் முழுக்க தமிழ் பேசும் கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார். இதற்கு ஏற்கனவே வரி செலுத்திய நடிகர் விஜய் வரி விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடுமையாக சாடிய நீதிபதி
இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம், நடிகர் விஜய்யை கடுமையாக சாடினார். ரீல் ஹீரோவாய் இருக்க கூடாது, ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும் வரி என்பது நன்கொடையல்ல கட்டாய பங்களிப்பு என்றும் கூறியிருந்தார்.
விஜய்க்கு அபராதம்
மேலும் சரமாரியாக அட்வைஸ்களை கூறிய நீதிபதி சுப்பிரமணியம் நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்து ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வைரலான ரசீது
விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாய் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் 2012ஆம் ஆண்டு விஜய் வரி செலுத்திய ரசீதையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
விஜய் மேல் முறையீடு?
அதேநேரத்தில் விஜய்க்கு எதிராகவும் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். கோடிகளில் சம்பாதிக்கும் விஜய் வரி விலக்கு கேட்பது ஏன் என்றும் விளாசினர். இந்நிலையில் ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக நடிகர் விஜய் மேல் முறையீடு செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிபதிக்கு எதிராக
வரி விலக்கு கோருவது குடிமக்களின் உரிமை, அப்படியிருக்கும் போது இவ்வளவு கடுமையான கருத்துக்களை கூறி நீதிபதி விமர்சித்திருக்க தேவையில்லை. இந்நிலையில் தன்னை கடுமையாக விமர்சித்த நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக நடிகர் விஜய் மேல் முறையீடு செய்து இதனை சட்டப்படி எதிர்கொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது.