twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடைசி படம் எதுன்னு கேள்விக்கேட்ட செய்தியாளர்: லேசாக கோபம் காட்டிய நடிகர் விக்ரம்

    |

    சென்னை: விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    Recommended Video

    Chiyaan Vikram | 3 Heroines, செம கலாய் | Cobra Trailer Launch | * Launch

    அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    கேரள மார்க்கெட்டை குறிவைக்கும் தமிழ் சினிமா.. நட்சத்திரம் நகர்கிறது.. கோப்ரா படங்களின் பிரமோஷன்கள்! கேரள மார்க்கெட்டை குறிவைக்கும் தமிழ் சினிமா.. நட்சத்திரம் நகர்கிறது.. கோப்ரா படங்களின் பிரமோஷன்கள்!

    கோப்ரா திருவிழா ஆரம்பம்

    கோப்ரா திருவிழா ஆரம்பம்

    விக்ரம் நடிப்பில் கடைசியாக உருவாகிருந்த 'மகான்' திரைப்படம், நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியானது. இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்திருந்த போதும், திரையரங்குகளில் வெளியாகவில்லையே என விக்ரம் வருத்தம் தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேல் விக்ரமின் படம் எதுவும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இந்நிலையில், அவர் நடித்துள்ள கோப்ரா, வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    கோப்ரா மீது விக்ரம் நம்பிக்கை

    கோப்ரா மீது விக்ரம் நம்பிக்கை

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாள் ரவி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கோப்ரா' படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும், ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், சமீபத்தில் வெளியான கோப்ரா ட்ரெய்லரும், பயங்கரமாக மிரட்டியிருந்தது. இதனால், கோப்ரா கண்டிப்பாக ஹிட் ஆகும் என விக்ரம் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

    பொன்னியின் செல்வனில் விக்ரம்

    பொன்னியின் செல்வனில் விக்ரம்

    கோப்ரா படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் அடுத்த மாதம் இறுதியில் வெளியாகிறது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களாக வெளியாகிறது. இந்தப் படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலன் பாத்திரத்தில் நடித்துள்ளது, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடைசி படம், விக்ரம் கோபம்

    கடைசி படம், விக்ரம் கோபம்

    இந்நிலையில், கோப்ரா படக்குழுவினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாள்ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது விக்ரமிடம், "பொன்னியின் செல்வன் தான் உங்களின் கடைசிப் படமா?" என செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். இந்த கேள்வியைக் கேட்டதும் சின்னதாக கோபம் கொண்ட விக்ரம், உடனே சுதாரித்துக்கொண்டு, "அப்படியெல்லாம் இல்லையே... இப்படிலாம் யாருங்க சொல்றாங்க?, நான் எப்பவுமே நடிச்சிட்டே தான் இருப்பேன். கதைக்கு தேவையான கேரக்டர்களில் நடிக்குறது தான் எனக்குப் பிடிக்கும். அமிதாப்பச்சன் மாதிரி இன்னும் வித்தியாசமா நடிப்பேன்" என தெரிவித்தார்.

    English summary
    Vikram starrer Cobra hits theaters next week. After this, Vikram spoke to the media and was asked about his last film. Vikram responds with a little anger( விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமிடம் அவரது கடைசி படம் குறித்து கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு விக்ரம் சிறிய கோபத்துடன் பதிலளித்துள்ளார் )
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X