Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இசையின்றி நாட்கள் விடிவதில்லை.. எம்எஸ்வியுடன் எஸ்பிபி.. அரிய போட்டோவை ஷேர் செய்து உருகிய விவேக்!
சென்னை: எம்எஸ்வியுடன் எஸ்பி பாலசுப்ரமணியம் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து நடிகர் விவேக் உருக்கமாக டிவிட்டியுள்ளார்.
Recommended Video
பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பி பாலசுப்ரமணியம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் கடந்த சனிக்கிழமை சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல் அடக்கம் செய்யப்பட்டது.
250 படங்களில் நடித்தவர்.. 53 வயதில் நுழைவுத் தேர்வு எழுதிய குணசித்திர நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து!
கலந்துள்ள குரல்
எஸ்பிபியின் மறைவை இன்னமும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எஸ்பிபி மறைந்துவிட்டார் என்பதையும் ரசிகர்களால் நம்ப முடியவில்லை. விடியல் முதல் இரவு வரை ஏதாவது ஒரு தருணத்தில் எஸ்பிபியின் குரல் பலரது வாழ்க்கையில் இரண்டரக் கலந்துள்ளது.
விவேக் டிவிட்
எஸ்பி பாலசுப்ரமணியம் உடனான நினைவுகளை பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக் எஸ்பிபி குறித்து உருக்கமான பதிவு ஒன்றறை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
எஸ்பிபியும் எம்எஸ்வியும்
இசையமைப்பாளர் எம்எஸ்வியுடன் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்தப்படி சிரித்து பேசும் போது எடுத்த போட்டோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த விரலில் விளைந்த மெட்டுக்கள்!அந்தக் குரலில் குழைந்த பாட்டுக்கள்! இந்தப் பயணம் முடிவதில்லை: இசையின்றி நாட்கள் விடிவதில்லை! என்றும் விவேக் குறிப்பிட்டுள்ளார்.
குருவை மிஞ்சி விட்டார்
இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு போட்டோவை பகிர்ந்ததற்கு நன்றி சார் என நடிகர் விவேக்குக்கு நன்றி கூறியுள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் இந்த குருவுடன் சிஷ்யன்....எம் எஸ் வியின் சாதனைகளில் ஒன்று.... இந்த சிஷ்யன் குணத்தால் குருவை கூட மிஞ்சி விட்டார்... என்றும் புகழாரம் சூட்டியுள்ளனர்.