Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரும்.. ஆனால்.. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் அட்வைஸ்!
சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா வந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை படு வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தினமும் என்னை அடிக்கிறாரு ... சுந்தரா டிரெவல்ஸ் நடிகை ராதா 2வது கணவர் மீது புகார்!
பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பிரபலங்கள் பாதிப்பு
அதேநேரத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. சாமானிய மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அச்சத்தை போக்க..
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கும் வகையில் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.
அச்சம் தேவையில்லை
அந்த வகையில் நடிகர் விவேக் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின் பேசிய அவர், 'பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை.
Recommended Video
பெரிய பாதிப்பு இருக்காது
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் என்றும் தெரிவித்துள்ளார்.