Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகை: யார் அவர், எவ்வளவு பணம் வாங்கினார்?
திருவனந்தபுரம்: நடிகை கடத்தல் சம்பவம் நடந்த பிறகு நடிகர் திலீப்புக்கு நெருக்கமான நடிகை ஒருவரின் வங்கிக் கணக்கில் லட்சக் கணக்கில் பணம் போடப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு நெருக்கமானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே திலீப்புக்கு ஜாமீன் வழங்க கேரளா உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
நடிகை
திலீப்புடன் சேர்ந்து அவருக்கு ஜோடியாக 2 படங்களில் நடித்த நடிகை ஒருவர் போலீஸ் வளையத்தில் சிக்கியுள்ளார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவர் திலீப்புக்கு நெருக்கமானவராம்.
பணம்
பிரபல நடிகை கடத்தப்பட்ட பிறகு திலீப்புக்கு நெருக்கமான நடிகையின் வங்கிக் கணக்கில் லட்சக் கணக்கில் பணம் போடப்பட்டுள்ளது. அந்த நடிகை பற்றி தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
போலீஸ்
லட்சக் கணக்கில் பணம் பெற்ற நடிகை யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் அவரின் பெயர் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
காவ்யா
நடிகை கடத்தலில் திலீப்பின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் வேறு ஒரு நடிகை சிக்கியுள்ளார்.