மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை ஜோதி மீனா புகார்!
சென்னை: தனது வீட்டுக்கு வந்து மர்ம நபர்கள் சிலர் மிரட்டிப் பணம் கேட்டதாகக் கூறி போலீசில் புகார் தெரிவித்துள்ளார் நடிகை ஜோதி மீனா.
முன்னாள் கவர்ச்சி நடிகை மறைந்த ஜோதி லட்சுமியின் மகள் ஜோதி மீனா. இவரும் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி, இப்போது நடிக்காமல் வீட்டில் உள்ளார்.

இன்று மாலை பாண்டி பஜார் காவல் நிலையம் வந்த அவர் தனது வீட்டுக்கு சில மர்ம நபர்கள் வந்ததாகவும், அவர்கள் தன்னை மிரட்டிப் பணம் கேட்டதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
ஜோதி மீனாவின் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், விசாரணையில் இறங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











