Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
‘மகனை மீட்டுத் தாருங்கள்..’ கணவருக்கு எதிராக நடிகை ஷர்மிளா போலீசில் பரபரப்புப் புகார்
சென்னை: தனது மகனைத் தனது கணவரிடம் இருந்து மீட்டுத் தரும்படி சென்னைக் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் நடிகை ஷர்மிளா.
சுமார் 52 படங்களில் நடித்தவரான நடிகை ஷர்மிளா நேற்று, சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது கணவரிடமிருந்து தன் மகனை மீட்டுத் தரும் படி கோரியிருந்தார். அவர் கொடுத்துள்ள புகார் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
நான் நடித்தப் படங்கள்...
நான் ‘கிழக்கே வரும் பாட்டு, ஒயிலாட்டம், முஸ்தபா, இவன் வேற மாதிரி' போன்ற 52 படங்களில் நடித்துள்ளேன். நடிகர்கள் பிரசாந்த், நெப்போலியன் ஆகியோருடன் கதாநாயகியாக படங்களில் நடித்து இருக்கிறேன்.
காதல் திருமணம்....
புகழின் உச்சியில் இருக்கும்போது, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டேன். தற்போது 5 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான். 1-வது வகுப்பு படிக்கிறான்.
பிரிந்து வாழ்கிறோம்....
எனது கணவர் ஸ்ரீபெரும்புதூரில், செல்போன் கம்பெனியில் என்ஜினீயராக வேலைபார்க்கிறார். எங்கள் குடும்ப வாழ்க்கையில் இப்போது பெரும்புயல் வீசி விட்டது. எனது கணவரும், நானும் தனித்தனியாக பிரிந்து வாழ்கிறோம். நான் சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறேன். எனது கணவர் ஸ்ரீபெரும்புதூரில் அவரது தாயாருடன் வாழ்கிறார்.
கணவரின் சந்தேகம்....
எனது கணவர் என் மீது சந்தேகப்பட்டார். அவருக்கு சினிமாவில் நடித்து பணமும் சம்பாதித்து கொடுக்கவேண்டும். ஆனால், நான் யாருடனும் பேசக்கூடாது. சினிமா சூட்டிங்கிற்கு பகலில் மட்டும்தான் போகவேண்டும். அவருக்கு இரவில் நல்ல மனைவியாக நடந்து கொள்ளவேண்டும். அவரது தாயாருக்கு நல்ல மருமகளாகவும் இருக்க வேண்டும்.
விவாகரத்து முடிவு....
சினிமாவில் நடித்ததால், எனது கணவர் விருப்பப்பட்ட மேற்கண்ட எதையும் நிறைவேற்றுவது கடினமாக இருந்தது. இதனால் எனக்கும், எனது கணவருக்கும் கருத்து வேறுபாடு, மோதல் ஏற்பட்டது. கணவரை விட்டு பிரிந்து விட்டேன். அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டேன்.
குழந்தை கடத்தல்...
எனது குழந்தை என்னுடன்தான் இருந்தான். ஆனால் கடந்த மாதம் 23-ந்தேதி அன்று, எனது குழந்தையை, எனது கணவர் கடத்திச் சென்றுவிட்டார். இப்போது எனது குழந்தை எங்கு இருக்கிறான், என்று தெரியவில்லை.
மன உளைச்சல்...
இரவில் செல்போனில் பேசி எனது கணவர் என்னை மிரட்டுகிறார். எனது குழந்தையை, செல்போனில் என்னை திட்டி பேசவைக்கிறார். இதன்மூலம் என்னை மன உளைச்சல் அடைய செய்கிறார். இரவில் தூங்கவிடாமல், தொல்லை கொடுத்து செல்போனில் பேசுகிறார்.
உயிருக்கு ஆபத்து....
எனது குழந்தையை மீட்டு தரவேண்டும். அவனது படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனது கணவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன். எனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும்' என இவ்வாறு ஷர்மிளா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.