Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எந்த மாதிரி மாஸ்க்கை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.. நடிகை ஷெரின் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!
சென்னை : கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் மிகத் தீவிரமாக பரவி வருவதை அடுத்து பிரபலங்கள் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Recommended Video
குறிப்பாக தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என பல திரைப்பிரபலங்கள் ஒவ்வொருவராக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு வருகின்றனர்.
லாக்டவுன் முடியும்னு எதிர்பார்த்தா வயசாகிடும்.. சட்டுப்புட்டுன்னு திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு முதன்மையாக இருக்கும் மாஸ்க்கை எவ்வாறு தேர்ந்தெடுத்து அணிய வேண்டும் என்பதை செய்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோவை நடிகை ஷெரின் பகிர்ந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.
உயிர் இழப்புகள்
கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் இப்போது இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி மக்களை பாடாய் படுத்தி வருகிறது. அரசும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து கொரோனாவை விரட்ட அனைத்து வழிகளையும் பின்பற்றி கொண்டுள்ளது. முதல் அலையை விடவும் இரண்டாவது அலை சற்று வீரியமாகவும் எளிதில் பலருக்கும் பரவக் கூடியதாகவும் இருப்பதால் இதனால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.
காற்றில் பரவக்கூடியது
கொரோனா தொற்று மிக எளிதாக காற்றில் பரவக்கூடியது என்பதால் பலரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றளவும் இந்திய அளவில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே மாஸ்க் பயன்படுத்துகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
எந்த மாதிரி மாஸ்க்கை
மாஸ்க் மூலமாக ஒரு புறம் கொரோனா பரவலை தடுக்க முடிந்தாலும் மற்றொரு புறம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் திரைப் பிரபலங்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டு விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் கொரோனாவிலிருந்து தப்பிக்க எந்த மாதிரி மாஸ்கை தேர்ந்தெடுக்க வேண்டும் அதை எவ்வாறு பயன் படுத்த வேண்டுமென ஷெரின் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
மாஸ்க்கை அணியுங்கள்
அந்த வீடியோவில் முதலில் சர்ஜரிக்கல் மாஸ்க் போட்டுக்கொண்டு மெழுகுவர்த்தியை ஊத எளிதாக மெழுகுவர்த்தி அணைந்து விடுகிறது. தொடர்ந்து இரண்டு சர்ஜரிக்கல் மாஸ்க் போட்டுக்கொண்டு மெழுகுவர்த்தியை கொஞ்சம் வேகமாக ஊத அணைந்து விடுகிறது. அதைத் தொடர்ந்து லேயர்கள் கொண்ட மாஸ்க் மற்றும் N95 மாஸ்க் அணிந்து மெழுகுவர்தியை தம் கட்டி ஊதியும் அணையவில்லை. எனவே மருத்துவ வல்லுநர்கள் கூறியது போலவே லேயர்கள் கொண்ட துணி மாஸ்க் அல்லது N95 மாஸ்க்கை அணியுங்கள் என ஷெரின் வெளியிட்டுள்ள இந்த வீடியோ அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.