Just In
- 39 min ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- 1 hr ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 2 hrs ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
Don't Miss!
- Finance
மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..!
- Sports
நடுவர்களின் பாரபட்சம்.. எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் ஆஸ்திரேலிய அணி.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை!
- News
"2 விஷயத்தை" அமித்ஷாவிடம் முன்வைத்த எடப்பாடியார்.. நல்லது நடக்குமா.. பலத்த எதிர்பார்ப்பு
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் ரெய்டு.. படமே வெளியாகல.. அதுக்குள்ள சோதனையா.. டார்கெட் செய்யப்படுகிறாரா விஜய்?
சென்னை: நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து வரவழைக்கப்பட்டு, நடிகர் விஜய் வீட்டில் 23 மணிநேரத்துக்கும் மேலாக நடந்த வருமான வரித்துறை சோதனையில், எந்த ஒரு ரொக்கமோ, முறைகேடுகளோ கண்டுபிடிக்கப் படவில்லை.
தொடர்ந்து குறி வைக்கப்படும் விஜய்.. அந்த பரபரப்பே அடங்கல அதுக்குள்ள இன்னொன்னா.. எதுல முடியப்போகுதோ?

மீண்டும் ரெய்டு
பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில், தற்போது மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 3 வாகனங்களில் வந்த 8க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் இதே பனையூரில் உள்ள வீட்டில் தான் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

மாஸ்டர் சம்பளம்
பிகில் பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், எந்தவொரு முறைகேடான ஆவணங்களோ, ரொக்கமோ கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், சமீபத்தில், மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது விஜய் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிகில் பிரச்சனை தான்
ஆனால், மாஸ்டர் படத்திற்கான சம்பளம் தொடர்பாக இந்த திடீர் வருமான வரி சோதனை தற்போது, நடைபெற்று வரவில்லை என்றும், பிகில் பட விவகாரம் தொடர்பாகத் தான் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், புதிய தகவல்களும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியாகி வருகின்றன.

இசை வெளியீடு
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற உள்ள நிலையில், அந்த இசை வெளியீட்டு விழாவில், அரசியல் குறித்த கருத்துக்களை நடிகர் விஜய் பேசக் கூடாது என்பதற்காக மிரட்டத்தான் இப்படி தொடர்ந்து, அவர் குறிவைக்கப் படுகிறார் என்ற பேச்சுக்களும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன.