Don't Miss!
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது... மத்திய அரசிடம் ஐஸ்வர்யா ரஜினி கோரிக்கை!
சென்னை: ஸ்டன்ட் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஆவணப் படம் 'சினிமா வீரன்'.
சினிமாவின் சண்டைக் ( ஸ்டன்ட்) கலைஞர்களை பற்றி பேசும் ஆவண படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரஜினிகாந்த் அவர்கள் பின்னணி ( Voice Over ) பேசுகிறார்.
சினிமா ஸ்டன்ட் கலைஞர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஐஸ்வர்யா தனுஷ் நேற்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்தார்.
அப்போது, "சினிமாவில் உள்ள பல துறையில் சாதனை புரிவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு வருடம் தோறும் தேசிய விருது வழங்கி வருகிறது. அதே போல் நிஜ ஹீரோக்களான சினிமா ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்," என்னும் கோரிக்கையை வைத்தார்.
இதைத் தொடர்ந்து ஸ்டன்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டன்ட் கலைஞர்கள் அனைவரும் ஐஸ்வர்யா தனுஷுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.