பிறந்தநாளை கொண்டாடாத ஜெயா பச்சன்: காரணம் மருமகள் ஐஸ்வர்யா ராய்
மும்பை: பாலிவுட் நடிகை ஜெயா பச்சன் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடவில்லையாம்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஜெயா பச்சன் கடந்த 9ம் தேதி 69 வயதடைந்தார். வழக்கமாக ஜெயா பச்சன் பிறந்தநாள் அன்று பார்ட்டி கொடுத்து அசத்துவார்கள்.
பச்சன்களின் பங்களாவான ஜல்சா விழாக்கோலமாக இருக்கும்.

கொண்டாட்டம்
இந்த ஆண்டு ஜெயா பச்சன் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. மருமகள் ஐஸ்வர்யா ராய் தனது தந்தை கிருஷ்ணராஜ் ராயை இழந்து வாடும் நேரத்தில் தனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டார் ஜெயா.

பாசம்
ஜெயா பச்சனுக்கும், மருமகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்படுகிறது என்று செய்திகள் வெளியானாலும் இருவரும் பாசக்காரர்களாகவே உள்ளனர்.

ஜெயா
பிறந்தநாள் அன்று ஜெயா பச்சன் டெல்லியில் இருந்துள்ளார். அமிதாப் மும்பையிலும், அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் மங்களூரிலும் இருந்துள்ளனர்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராய் தனது ந்தைக்கு சில சம்பிரதாயங்கள் செய்ய மங்களூர் வந்தார். அவருடன் கணவர் அபிஷேக் பச்சனும் வந்திருந்தார். அபிஷேக் தனது மாமனாருக்கு மிகவும் பிடித்த மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











