Don't Miss!
- News நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா? கோர்ட்டுக்கே போயிட்டாங்க.. இன்று ஐகோர்ட் விசாரணை
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மாமியாருடன் மோதல்: வீட்டை விட்டு வெளியேறுகிறாரா ஐஸ்வர்யா ராய்?
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மாமியார் வீட்டில் இருந்து வெளியேறப் போவதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்ததில் இருந்து மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயாவுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.
அமிதாபின் பங்களாவான ஜல்சாவில் தான் அவர்கள் வசித்து வருகிறார்கள்.
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராய்க்கும், மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஆகவே ஆகாது என்று சில காலமாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் ஐஸுக்கும் நாத்தனார் ஸ்வேதாவுக்கும் பிரச்சனை என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
வீடு
ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் சேர்ந்து மும்பையில் ரூ. 21 கோடிக்கு அபார்ட்மென்ட் வாங்கியுள்ளனர். ஐஸ் தனது கணவர் மற்றும் மகள் ஆராத்யாவுடன் அந்த வீட்டில் தனிக்குடித்தனம் போகப் போவதாக செய்திகள் வெளியாகின.
பெற்றோர்
அபிஷேக் பச்சனுக்கு தனது பெற்றோர் என்றால் உயிர். அவர்களை விட்டுவிட்டு மனைவியுடன் தனிக்குடித்தனம் போக மாட்டார் அபிஷேக். இது ஐஸ்வர்யாவுக்கும் தெரியும். அதனால் அவர் தனியாக செல்ல மாட்டாராம். முதலீட்டுக்காக அபார்ட்மென்ட் வாங்கியுள்ளார்களாம்.
தனிக்குடித்தனம்
முன்னதாக அபிஷேக் பச்சனுக்கும், பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கரிஷ்மா திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் போக விரும்பியதால் அபிஷேக் அவரை பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.